Sunday, 7 September 2014

எம்பில் பட்டம் முடித்த தலைமை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் தர வேண்டும்.

 உயர்படிப்புபடித்த பள்ளி தலைமை ஆசிரியருக்குஊக்க ஊதியம் தராத கல்விஅதிகாரிமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2வாரத்தில் ஊக்க ஊதியம் வழங்க
கல்வி அதிகாரிக்கு கெடு விதித்துள்ளது.

வேதாரண்யத்தைசேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்டி.ராமசாமி. இவர் சார்பாக வக்கீல்காசிநாத பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:மனுதாரர் ராமசாமி வேதாரண்யம் நடுநிலைபள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிவருகிறார். அவர் 2010ம் ஆண்டு பிஏபிட் முடித்தார்.இதற்காக அவருக்கு முதல்ஊக்க ஊதிய உயர்வு தரப்பட்டது. அதன்பிறகுஎம்ஏ முடித்ததற்காக இரண்டாம் ஊக்க ஊதியம் தரப்பட்டது. 2009ல் எம்பில் பட்டம் படித்துமுடித்தார். இதற்கு 3ம் ஊக்கஊதிய உயர்வு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம்விசாரித்து 3ம் ஊக்க ஊதியம்தர உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்டகல்வி அதிகாரிகள் அமல்ப டுத்தவில்லை. எனவேஅவர் மீது நீதிமன்ற அவமதிப்புநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅவர் வழக்கில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சுப்பையாவிசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பாகவக்கீல் காசிநாதபாரதி ஆஜராகி, ஏற்கனவே அதிகம்படித்த ஆசிரியர்களுக்கு 3ம், 4ம் ஊக்கஊதியம் தரப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றம்பல்வேறு தீர்ப்புகளை கூறியது. எனவே மனுதாரருக்கு 3ம்ஊக்க ஊதியம் தர வேண்டும்என்றார்.இதை நீதிபதி சுப்பையாவிசாரித்து, 2 வாரத்தில் தலைமை ஆசிரியருக்கு ஊக்கஊதியம் தரவேண்டும் என்று உத்தரவிட்டார். இதைகல்வித்துறை செயலாளர் அமல்படுத்தி நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்என்றும் உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment