Tuesday, 30 September 2014

PG TRB Exam விரைவில்...


தமிழகத்தில்அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியைசேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம்உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்குதேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம்விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்தமூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சிஉயர்நிலை பள்ளிகள் 300,
மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
           கடந்த ஜூலையில் நடந்தசட்டசபை கூட்டத்தில் 100 உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் எனஜெ., அறிவித்தார். அதன் அடிப்படையில் தரம்உயர்த்தப்பட்ட 100 பள்ளிகள் பட்டியலை பள்ளி கல்வி துறைசெயலர் சபிதா வெளியிட்டுள்ளார். இந்தபள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள், ஒன்பதுமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 900 பேர் நியமிக்கப்படஉள்ளனர். இவர்களுக்கான தேர்வு டி.ஆர்.பி., மூலம் விரைவில்நடக்க உள்ளது.
            கல்வி துறை அதிகாரிகள்ஒருவர் கூறுகையில், “அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இதில்ஒவ்வொரு பள்ளிக்கும் புதிதாக தலா ஒன்பதுமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர்என 1000 காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கானபுதிய ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்,” என்றார்.

0 comments:

Post a Comment