Saturday, 27 September 2014

நடுநிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம்; பள்ளி கல்வித்துறை உத்தரவு

மாணவர்மத்தியில் சேவை மனப்பான்மையை வளர்க்கும்விதமாக, நடுநிலைப்பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவை சங்கம்அமைக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் 8,400 மாணவர்கள்
உள்ளனர். நடுநிலைப்பள்ளிகளில் ஆறு, ஏழு மற்றும்எட்டாம் வகுப்பு மாணவர்கள் மத்தியிலும்சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, இளையோர் செஞ்சிலுவைசங்கம் அமைக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சேவை, பெற்றோருக்கு உதவுதல், சமுதாய பணி மற்றும் முதலுதவிஆகிய பண்புகளை, மாணவர் மத்தியில் வளர்க்கவேண்டும்; சுகாதாரம் பேணுதல், நட்புணர்வு, சேவை மனப்பான்மை, ஒழுக்கம், சுற்றுப் புறச் சூழல் மேலாண்மை, விபத்து நேரங்களில் முதலுதவி, பேரிடர் மேலாண்மை எனமாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அந்தஉத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள 267 நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளிக்குஒருவர் வீதம் செஞ்சிலுவை சங்கஆலோசகராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர்விவேகானந்தா வித்யாலயா பள்ளி யில், அவர்களுக்குஆலோசகர் பயிற்சி அளிக்கப்பட்டது.

இளையோர்செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர்மனோகரன் தலைமையில், பயிற்சியாளர்கள் பாலசுப்ரமணியம், அருள்மொழி, ஜெயிலானி ஆகியோர், செஞ்சிலுவை சங்க செயல்பாடு குறித்துபயிற்சி அளித்தனர். ஆலோசகர்கள் மூலம், மாணவர்களுக்கு பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.சேவை மனப்பான்மைகொண்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இளையோர்செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களாக சேர்க்கப்படஉள்ளனர். முப்பருவ கல்வி முறையில், பள்ளிஇணை செயல்பாடு பிரிவில், சேவை பணிகளுக்கு மதிப்பெண்வழங்கப்படுவதால், செஞ்சிலுவை திட்டத்தில் சேவை செய்யும் மாணவர்கள், மதிப்பெண் பெற வாய்ப்புஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment