Sunday, 7 September 2014

தகுதித்தேர்வை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: சென்னையில் 29ம் தேதி நடக்கிறது.

ஆசிரியர்தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையைஅமல்படுத்தக்கோரிசென்னையில்வரும் 29ம் தேதி ஒருங்கிணைந்தபட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம்நடத்தப்பட உள்ளது.
தஞ்சையில்ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசரஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர்
சங்க மாநில ஒருங்கிணைப்பாளர்ராமதாஸ் தலைமை வகித்தார்.
வேலையில்லாபட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர்ராகராமு முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித்தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடி உள்ளன. இதனால் பல ஆண்டுகளாக ஆசிரியர்பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர்பணிபெற முடியாமல் உள்ளது. மேலும் தற்போதுஆசிரியர்பயிற்சியை பெற்றவர்களும், நியமனம் பெற முடியாதசூழல் உள்ளது. எனவே பலபள்ளிகளில் ஆசிரியர்களின்றி உள்ளதால் மாணவர்களின் கல்வி தரம் பாதிப்புக்குள்ளாகிள்ளது.

இதை முதல் வர் பரிசீலனைசெய்து யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பழைய நடைமுறையில்பதிவுமூப்பு முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.2010ம் ஆண்டு சான்றிதழ்சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில் நியமனம்பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 2012ம் ஆண்டு ஜூன்23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில்பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போகநிலுவையில் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்கவேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்திவரும் 29ம் தேதி சென்னையில்உண்ணாவிரத போராட்டம் நடத்தப் படும் என்பதுஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments:

Post a Comment