‘ஆசிரியர்தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணிகிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண்அடிப்படையில் தான், ஆசிரியர் பணிநியமனம் இருக்கும்’ என, ஆசிரியர் தேர்வுவாரிய (டி.ஆர். பி.,) வட்டாரம் தெரிவித்தது.
டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும், மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை, அரசு அறிவிப்புகள்குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதிய வர்களின் கேள்விக்கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.
இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம்தெரிவித்தது.
டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும், மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை, அரசு அறிவிப்புகள்குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதிய வர்களின் கேள்விக்கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர்தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும், தேர்ச்சிபெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில், 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சிபெற்றிருப்பது, பெரும் சிக்கலை உருவாக்கிஉள்ளது. ஏனெனில், தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசுவேலை கிடைக்கும் என்ற நம் பிக்கையில்உள்ளனர்.
தற்போதுள்ளகாலி இடங்களுக்கு, தேர்வு பெறுவோர் போக, மீதம் உள்ளவர்களுக்கு, அடுத்த பணி நியமனத்தின்போது, முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள், எதிர்பார்த்துஇருக்கின்றனர். ஆனால், இதில் உள்ளகுழப்பத்தை நீக்குவதற்கு, டி.ஆர்.பி., முன்வரவில்லை.
எனினும், இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண் சலுகையின்காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின்மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்து, இட ஒதுக்கீடுவாரியாக, அதிக மதிப்பெண் பெற்றவிண்ணப்பதாரர் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர். தேர்வுபெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களைநிரப்பும்போது, முன்னுரிமை கோர முடியாது.
அடுத்து, மீண்டும், டி.இ.டி., தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின்மதிப்பெண் மற்றும் ஏற்கனேவ, 2013ல்தேர்ச்சி பெற்று, அரசு பணிகிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்து, அதில், அதிக மதிப்பெண் பெறும்விண்ணப்பதாரரே, அரசுப் பள்ளிஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம்தெரிவித்தது.






0 comments:
Post a Comment