Monday, 1 September 2014

குரு உத்சவ்' என்பது கட்டுரைப் போட்டி: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம்

ஆசிரியர்தினம் என்பதை இனி 'குருஉத்சவ்' என்றுதான் அழைக்க வேண்டும் மத்தியஅரசு ஆணை வெளியிட்டுள்ளதற்கு தமிழகஅரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், 'குரு உத்சவ்' என்பது
கட்டுரைப் போட்டிக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு மட்டுமே எனமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: 'குரு உத்சவ்' ஆசிரியர்களைக்கொண்டாடும் வகையில் நாடு முழுவதும்நடத்தப்படவுள்ள கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு. இதற்குக் கூட அரசியல் கட்சிகள்எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றால் எனக்கு அதுவேதனை அளிக்கிறது. அதேபோல், ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில்ஆற்றும் உரையை பள்ளி மாணவர்கள்கட்டாயம் பள்ளியில் இருந்து காண வேண்டும்என எந்த ஒரு உத்தரவும்பிறப்பிக்கப்படவில்லை. தேவையில்லாமல் அரசியல் கட்சிகள் திரித்துக்கூறுகின்றன என்றார்.
ஆசிரியர்தினத்தை 'குருஉத்சவ்' என்று பெயர்மாற்றம் செய்யும்உத்தரவு தேசிய ஒருமைப்பாடுக்கு எதிரானதுஎன வைகோவும், 'ஆசிரியர் நாள்' என்ற பெயரை'குரு உத்சவ்' என மத்தியஅரசு மாற்றியிருப்பது சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்கும் நடவடிக்கை என பாமக நிறுவனர்ராமதாசும் கூறியுள்ளனர். மதிமுக, பாமக கட்சிகள்தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம்வகிக்கின்றன.

முன்னதாகநேற்று (ஞாயிற்றுக் கிழமை), திமுக தலைவர்கருணாநிதி விடுத்திருந்த அறிக்கையில்: ஆசிரியர் தினம் என்பதை இனி'குரு உத்சவ்' என்றுதான் அழைக்கவேண்டும் மத்திய அரசு வெளியிட்டுள்ளஆணை, நம் மொழியை வீழ்த்தபின்னப்பட்ட சூழ்ச்சி என கூறியிருந்தார்.

0 comments:

Post a Comment