Friday, 19 September 2014

தொழில் கடன் பெற என்ன ஆவணங்கள் தேவை?

தமிழக அரசின் யு.ஒய்..ஜி.பிதிட்டத்தின் கீழ் பயன்பெறத்தேவையான அடிப்படை தகுதிகள்வங்கிக் கடன் விவரம் ஆகியவைகுறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மையபொதுமேலாளர் .ராசு.
யு.ஒய்..ஜி.பிதிட்டத்தில் கடன் பெற கல்வித் தகுதிவயதுநீங்கலாக குடும்ப ஆண்டு வருமானம் போன்ற நிபந்தனைகள் எதுவும்உண்டா?
ஆம்நிபந்தனைகள் உண்டுபடித்து வேலை இல்லாதவருக்குத்தான்
கடனுதவி வழங்கப்படுகிறது என்றாலும்அவரது குடும்பத்தின்பொருளாதாரப் பின்னணியும் கடன் பெற முக்கியமான தகுதியாகஎடுத்துக்கொள்ளப்படுகிறதுஏனெனில்ஏழை இளைஞர்களுக்கானகடனுதவியை வசதி படைத்தவர்கள் பெற்றுவிடக் கூடாது என்பதில்அரசு கவனமாக இருக்கிறது.

அதன்படி விண்ணப்பதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்பிற மானியத் திட்டங்களின்கீழ் எந்தவொரு வங்கிக் கடனும் பெற்றிருக்கக் கூடாதுவங்கிக் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாதவராகவும் இருக்கக் கூடாது.

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த கால வரையறை உள்ளதா?
மானியத் தொகை நீங்கலாக மீதம் உள்ள தொகையைகடன் பெற்றநாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு திருப்பிச்செலுத்தவேண்டும்.

இந்த திட்டத்துக்காக எந்த வங்கிகள் கடனுதவி வழங்குகின்றன?
அனைத்து வணிக வங்கிகள்அனைத்து தேசியமயமாக்கப்பட்டவங்கிகள்தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவுவங்கிகள் ஆகியன கடனுதவி வழங்குகின்றன.

யுஒய்இஜிபி திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க விண்ணப்பம்எங்கே பெறுவது?
அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் இயங்கும் மாவட்ட தொழில்மையத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.அவற்றை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்களை இணைக்கவேண்டும்?
பள்ளிகல்லூரி மாற்றுச் சான்றிதழ் நகல்சுய தொழில்தொடங்குவதற்காக வாங்கப்படும் இயந்திரங்கள்,தளவாடங்களுக்கான விலை மதிப்பீடு (கொட்டேஷன்), சாதிச்சான்றிதழ் நகல்திட்ட அறிக்கை (புராஜக்ட் ரிப்போர்ட்), குடும்பஅட்டை நகல்குடும்ப அட்டை இல்லையென்றால் வட்டாட்சியரிடம்பெறப்பட்ட இருப்பிடச் சான்றுமுன்னாள் ராணுவத்தினர் அல்லதுமாற்றுத் திறனாளி என்றால் அதற்கான சான்றுபாஸ்போர்ட் அளவு 2புகைப்படங்கள்உறுதிமொழிப் பத்திரம் ஆகியவற்றைவிண்ணப்பத்துடன் இணைக்கவேண்டியது அவசியம்.

நன்றி தி இந்து;;

0 comments:

Post a Comment