Sunday, 14 September 2014

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் திருமதி சபிதா வீடு முற்றுகை; போலீஸ் தடியடி,பெண் ஆசிரியர் பலத்த அடி மருத்துவமனையில் சேர்ப்பு


இன்று பள்ளி கல்வித்துறை முதன்மைசெயலாளர் சபிதா அவர்களை சந்தித்துமனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்களை போலிஸார் தடுத்தனர் அதனை தொடர்ந்து மனிதசங்கிலி போராட்டம் நடத்திய போராட்டக்கார்ர்கள் மீதுதடியடி நடத்தப்பட்டது இதில் ஒரு பெண்உட்பட பலர் காயமடைந்தனர் போராட்டகுழு தலைவர் செல்லதுரை கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அனைவரையும்காவல் துறையினர் கைது செய்து தற்போதுமதுரவாயல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கைதுசெய்தவர்களை வைத்துள்ளனர் . இது குறித்து போராட்டகாரர்களில்ஒருவர் கூறியது நாங்கள் அமைதியாகபோராடினோம் எங்கள் மீது காவல்துறையினர்தடியடி நடத்தினர் இதில் ஒரு பெண்னுக்குபலமாக காயம் ஏற்பட்டுள்ளது அவர்சேப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்எனக்கு சட்டை கிழிந்துள்ளது கையில்அடிபட்டுள்ளது எங்கள் போராட்டத்தை திசைதிருப்பிய சிலர் மீதும் எங்கள்மீது தடியடி நடத்திய காவல்துறையினர்மீதும் இன்று மாலை மாநகரகாவல் துறை ஆனையாளரிடம் புகார்மனு கொடுக்க செல்ல உள்ளோம். என்று கூறினார்.

0 comments:

Post a Comment