மதுரை: மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில்பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல்கலந்தாய்வு ஜூன் 26ல் நடந்தது.அப்போது மாநிலம் முழுவதும்கணக்கெடுக்கப்பட்ட உபரி(சர்பிளஸ்) ஆசிரியர்களை 'பணி நிரவல்'
அடிப்படையில் வேறு மாவட்டங்களுக்கு மாற்ற முடிவுசெய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உபரி ஆசிரியர்எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டம் தோறும் கூடுதல் பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.இக்கூடுதல் இடங்களில்400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும்நியமிக்கப்பட்டனர். மதுரையில் 29 ஆசிரியர்களுக்கு பணியிடங்கள்ஒதுக்கப்பட்டன. இவர்கள் பணியில் சேர்ந்த பின், நிதித்துறை ஒப்புதல்கிடைக்காததால், ஜூலை, ஆகஸ்ட் மாத சம்பளம் கிடைக்கவில்லை.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில், கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்டஆசிரியர்களுக்கு இரண்டு நாட்களாக அடுத்தடுத்து சம்பளம் வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கல்வித் துறையின் இந்தநடவடிக்கைக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும்ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.






0 comments:
Post a Comment