Tuesday, 12 August 2014

அரசு பள்ளிகளின் தரம் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆய்வுப் பணி

கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றின்கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வித் தரம், ஆசிரியர்கள்செயல்பாடு, பள்ளி நிர்வாகம் ஆகியவைகுறித்து ஆய்வு செய்ய



பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள் ளது.
இதன்படிஇன்று முதல், தமிழகம் முழுவதும்உள்ள பள்ளிகளில் ஆய்வுப் பணி நடக்கிறது. இதில், 32 மாவட்டங்கள் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 7 நாட்கள் இந்த ஆய்வுநடக்கிறது. பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், ஆசிரியர்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர்ஆகியோர் தலைமையில் 12 இணை இயக்குநர்கள் இந்தஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளனர். ஆய்வுப் பணி இரண்டு பிரிவுகளாகநடக்கிறது. தொடக்க கல்வித் துறையின்கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்விஅலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள்இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்படுவார்கள். பள்ளிக் கல்வித்துறையின்கீழ் இயங்கும் உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் நடக்கும் ஆய்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கல்வி சார்ந்த ஆய்வில் பாடவாரியாக ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகின்றனர். மாணவர்களின் கற்றல் திறன் எப்படிஉள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள்சேகரிக்கப்படும். முடிவில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டியபள்ளிகளுக்கு ஷீல்டுகள் கிடைக்கும். ஆனால், 75 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி காட்டியபள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பாடஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்குவசதியாக பத்தாம் வகுப்பு மற்றும்பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சிகையேடுகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதில் சுமார் 15 லட்சம்மாணவ மாணவியர் இந்த பயிற்சி கையேடுகளைபெறுவார்கள்.

0 comments:

Post a Comment