ஒருவருடையபத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளிமதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லதுதீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகிஇழக்க நேரிட்டால் அதன் நகலை பெறமுடியும். அதற்கான நடைமுறை வழிகளைதெரிந்து கொள்ளலாம் வாங்க.
* முதலில்மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில்தேவையான தகவல்களுடன் புகார்
அளிக்க வேண்டும். * அடுத்துதொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்புவிளம்பரம் செய்ய வேண்டும்.
* இதற்குகுறைந்தது ரூ.500 வரை செலவழிக்கநேரிடும்.
* பின்னர்காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழைபெற வேண்டும்.
* இதனைதாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெறவேண்டும்.
* சான்றிதழ்நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்குவங்கி வரவோலை வாங்க வேண்டும்.
* பின்னர்பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார்சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றைகோரிக்கை மனு ஒன்று எழுதிஅதனுடன் இணைக்க வேண்டும்.
* மனுதாரர்எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லதுபிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமைஆசிரியர் மூலம் மாவட்ட கல்விஅதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
* அதனைமாவட்ட அதிகாரி பரிசீலனை செய்துமாநில அரசு தேர்வு துறைஇயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசுசெய்வார்.
* சான்றிதழ்தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்விதேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.
* இதனைஇறுதியாக எந்த பள்ளியில் படித்துமுடித்தோமோ, அந்த பள்ளி தலைமைஆசிரியரிடம் பெற முடியும்.
SOURCE : DINAKARAN WEB DT:22.08.2014
0 comments:
Post a Comment