கடலூர்:பள்ளி கல்வித் துறையில்காலியாக உள்ள கணினி பயிற்றுனர்பணிக்கான பதிவு மூப்பு பட்டியல்மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;தமிழக பள்ளி கல்வித்துறையில்காலியாக உள்ள 652 தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணிகாலியிடங்கள்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்படஉள்ளது. இதற்காக வேலைவாய்ப்பு மற்றும்பயிற்சி துறையில் பதிவு மூப்பு பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்குபி.எஸ்சி., கணினி அறிவியல்அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல்தொழில் நுட்பத்துடன் பி.எட்., முடித்திருக்கவேண்டும்.முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள அனைத்துபதிவுதாரர்களும், முன்னுரிமையற்ற பிரிவில் எஸ்.டி., பிரிவினர்3.9.2011 வரையிலும், எஸ்.சி.,அருந்ததியினர்20.12.2010 வரையிலும், பி.சி., முஸ்லிம்17.8.2009 வரையிலும், எஸ்.சி.,-எம்.பி.சி., பி.சி., உள்ளிட்ட இதரபிரிவினர் 22.8.2008 வரையிலும் பதிவு செய்துள்ளவர்கள் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கானபதிவு மூப்பு பட்டியல் மாவட்டவேலைவாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில்ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை வரும் 31.10.2014ம்தேதிக்குள் நேரில் சென்று உறுதிசெய்துக் கொள்ள வேண்டும்.
பட்டியியலில்பெயர் இல்லாதவர்கள் அசல் வேலை வாய்ப்புஅலுவலக அடையாள அட்டையுடன், மாவட்டவேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறுசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment