Monday, 27 October 2014

ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழக்கு : பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகினார்

சென்னைஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பலஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில், ‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்அடிப்படையில் நீண்ட கால பணி
செய்யும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்துவழங்கவேண்டும். ஆனால், சில ஆசிரியர்களுக்குமட்டுமே இந்த சிறப்பு நிலைஅந்தஸ்து வழங்கப்பட்டதால், பலர் ஐகோர்ட்டில் வழக்குதொடர்ந்தனர்.
வழக்கைவிசாரித்த ஐகோர்ட்டு, நீண்ட கால பணிசெய்துள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்துவழங்க உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர்கள் சிலருக்குமட்டுமே சிறப்பு நிலை அந்தஸ்துவழங்கப்பட்டுள்ளது. எனவே, ஐகோர்ட்டு உத்தரவைஅமல்படுத்தாத தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைசெயலாளர் சபீதா உள்ளிட்ட அதிகாரிகள்மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்என்று கூறியிருந்தனர்.
வழக்கைவிசாரித்த நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன்ஆகியோர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர்சபீதாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதையடுத்துஇந்த வழக்கு இன்று நீதிபதிகள்முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சபீதாகோர்ட்டில் ஆஜராகினார். அரசு தரப்பில் வக்கீல்கிருஷ்ணகுமார், நீண்ட கால பணிசெய்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்துவழங்கப்பட்டு விட்டது. இந்த கோர்ட்டு உத்தரவைஅமல்படுத்தப்பட்டு விட்டதுஎன்று கூறினார்.
இதையடுத்துநீதிபதிகள், செயலாளர் சபீதாவை அருகில் அழைத்துகடும் கண்டனம் தெரிவித்து சிலகேள்விகளை கேட்டனர். அவற்றின் விவரம் பின் வருமாறு:–
நீதிபதிகள்: உங்களை நேரில் ஆஜராக வேண்டும்என்று உத்தரவிடும்படியான ஒரு சூழ்நிலையை ஏன்உருவாக்கினீர்கள்? உங்களை போன்ற ..எஸ். அதிகாரிகளைஇதுபோல் நேரில் ஆஜராக வேண்டும்என்று உத்தரவிட எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால், ஐகோர்ட்டுபிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த ஏன் கால தாமதம்செய்கிறீர்கள்? பள்ளிக்கல்வித்துறை செயலாளராகி உங்கள் மீது எத்தனைகோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் இந்த ஐகோர்ட்டில் நிலுவையில்உள்ளது என்று தெரியுமா?
சபீதா: பல வழக்குகள் உள்ளது.
நீதிபதிகள்: ஏன் இந்த நிலை? இந்தஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்துங்கள். அல்லதுஅந்த உத்தரவை எதிர்த்து அப்பீல்செய்யுங்கள். இதை செய்யாமல் இருப்பதால், இப்படி வழக்குகள் வருகிறது. உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். இந்த கோர்ட்டு அவமதிப்புவழக்குகளை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறுநீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment