Sunday, 12 October 2014

ஓய்வூதியதாரருக்கு புதிய திட்டம் குடிநீர் வாரியம் அறிவிப்பு: ஓர் ஆண்டுக்கு பிறகு நடைமுறை

ஓய்வூதியதாரர்கள்பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தைசென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி ஓய்வூதியர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இதுகுறித்து சென்னைக் குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கூறியிருப்பதாவது:

சென்னைகுடிநீர் வாரியம் செயல்படுத்தப்பட உள்ளபுதிய திட்டத்தின்படி, ஓய்வூதியதாரர்களிடமிருந்து மாதம் ரூ.80 ஓய்வூதியத்திலிருந்துஅவர் உயிரோடு இருக்கும் வரைபிடித்தம் செய்யப்படும். அவர்களிடமிருந்து முதல் 12 மாதங்கள் பிடித்த பின்னரே இத்திட்டத்தில்இருந்து பயன்பெறுவது நடைமுறைக்கு வரும். அதற்குப் பின்னர்ஓய்வூதியர் இறந்தால் அவருடைய மனைவி அல்லதுகணவர் / உயிரோடு இல்லாவிடில் அவர்நியமனம் செய்த நபர் அல்லதுவாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

இத்திட்டத்துக்கானநியமனப் படிவத்தை குடிநீர் வாரியம் தபால் மூலமாகதனது ஓய்வூதியதாரர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படிவத்தை வாரியத்தின்இணையதளமானwww.chennaimetrowater.tn.nic.in ல்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
அக்.15-க்குள் படிவங்களை அனுப்பவேண்டும்
பூர்த்திசெய்யப்பட்ட படிவம், துணை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், சென்னை குடிநீர் வழங்கல்மற்றும் கழிவுநீரகற்று வாரியம், எண்.1, பம்பிங் ஸ்டேசன்ரோடு, சென்னை-2 என்ற முகவரிக்கு அக். 15-க்குள் அனுப்ப வேண்டும். தவறும்பட்சத்தில்ஓய்வூதியதாரர்கள் இத்திட்டத்தில் சேருவதற்கு விருப்பம் உள்ளதாகக் கருதி தங்களது ஓய்வூதியத்திலிருந்துரூ.80/- இந்த மாதம்முதல் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறுசென்னைக் குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment