தமிழகத்தில்ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில்தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்குநியமிக்கப்பட்டு
வருகின்றனர்.
அதில் டிஆர்பி வெளியிட்ட விடைகள்சரியானவை என தெரிவித்துள்ளதன் மூலம்தேர்வு பட்டியலைவெளியிட தடை நீங்கியது. எனவேபுதிய அரசாணை அடிப்படையில் விரைவில்தேர்வு பட்டியலை வெளியிட டிஆர்பி நடவடிக்கையில்இறங்கி உள்ளது. 72 ஆயிரம் பேர் ஆசிரியர்பணியில் சேர தகுதியுடன் இருந்தாலும்முதல் கட்டமாக 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம்வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கானபட்டியலை கல்வித் துறை வெளியிடும்என்று தெரிகிறது.
இதற்காகஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும்தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், பல்வேறுகுளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால்முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
குறிப்பாககடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்டடிஇடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து இட ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகையைஅரசு அறிவித்தது. இதன்மூலம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுதேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியானது. ஆகஸ்ட் மாதம் நடந்ததேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையேவெயிட்டேஜ் மதிப்பெண் முறை, விடைகளில் குளறுபடிஉள்ளிட்டவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி புதிய வெயிட்டேஜ் முறைஅறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான விடை களை எதிர்த்துதொடரப்பட்ட 70க்கும் அதிகமான மனுக்கள்மீது உயர் நீதிமன்ற நீதிபதிநாகமுத்து இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் டிஆர்பி வெளியிட்ட விடைகள்சரியானவை என தெரிவித்துள்ளதன் மூலம்தேர்வு பட்டியலைவெளியிட தடை நீங்கியது. எனவேபுதிய அரசாணை அடிப்படையில் விரைவில்தேர்வு பட்டியலை வெளியிட டிஆர்பி நடவடிக்கையில்இறங்கி உள்ளது. 72 ஆயிரம் பேர் ஆசிரியர்பணியில் சேர தகுதியுடன் இருந்தாலும்முதல் கட்டமாக 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம்வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கானபட்டியலை கல்வித் துறை வெளியிடும்என்று தெரிகிறது.






0 comments:
Post a Comment