Sunday, 6 July 2014

ஆசிரியர் பட்டயத்தேர்வு இன்று துவங்குகிறது.

தொடக்க கல்வி பட்டயப்படிப்புக்கு, முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று துவங்குகிறது.

தொடக்க கல்வி ஆசிரியராவதற்கு, தமிழக அரசின் சார்பில், அரசு பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என, ௪௦௦ பயிற்சிமையங்கள் உள்ளன. இதில், முதலாமாண்டு மாணவர்களுக்கான, தேர்வுக்கு 9,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இவர்களுக்கான தேர்வு, இன்று முதல் நடக்கிறது. கோவை மண்டலத்தில், ராஜவீதியில் உள்ள துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும் தேர்வில், மாணவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment