Thursday, 31 July 2014

குரூப்-1 தேர்வில் முறைகேடு புகார் தேர்ச்சி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 83 பேரின் மேல் முறையீட்டு மனு உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - DINATHANTHI


புதுடெல்லி, ஆக.1-டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேரின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி
சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. 83 பேர் தேர்வு2000-2001-ம் ஆண்டுக்கான காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேர் வெவ்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 83 பேரும் முறைகேடு செய்திருப்பது நிபுணர் குழுவின் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும், எனவே அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றது செல்லாது என்றும், எனவே அவர்கள் வகித்து வரும் அரசு பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பில் மாற்றம் செய்யக் கோரி பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தேர்வை நடத்திய டி.என்.பி.எஸ்.சி. சார்பாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பில் மாற்றம் தேவைஅந்த மனுவில் 2000-2001-ம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடுகள் நடந்தனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை ஐகோர்ட்டு நியமித்திருந்ததாகவும் அந்த குழு முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தவறாக தந்த அறிக்கையின் அடிப்படையில் தேர்வானவர்களின் தேர்ச்சி செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. எனவே, தவறான அந்த அறிக்கையை விட்டுவிட்டு புதிய நிபுணர் குழு மூலம் மீண்டும் விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தற்போது தேர்வாகியுள்ள 83 பேரும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணி புரிந்து வருவதாகவும், வயது பிரச்சினை காரணமாக மீண்டும் ஒருமுறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது சாத்தியமற்றது என்றும் எனவே, சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பில் மாற்றங்கள் தேவை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக விசாரிக்க மறுப்புஇந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே, விக்ரம்ஜித் சென், பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் முறையிடப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜரானார். வழக்கு விசாரணை தொடங்கியதும், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இன்னும் 10 நாட்களுக்குள் வேறு அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment