மதுரை பல்கலைக் கழக, துணைவேந்தர் கல்யாணிமதிவாணன் பதவி இழப்பு, தமிழககல்வித் துறையில் பரபரப்பு ஏற்படுத்தும் தகவலாகும். பல்கலைக் கழக மானியக்குழுவின் சட்டதிட்டங்களின் படி, அவர்
இப்பணிக்குதேர்வு செய்யப்படவில்லை என, மதுரை ஐகோர்ட்கிளை தீர்ப்பளித்திருக்கிறது.
சென்னைபல்கலையின், சர் ஏ.லட்சுமணசாமிமுதலியார், 27 ஆண்டுகள் துணைவேந்தராக இருந்து, அப்பதவிக்கு புகழ் சேர்த்தார். மேலும், மால்கம் ஆதிசேஷய்யா உட்பட, பலர் இப்பெருமைமிகு பதவியை சிறப்பித்த வரலாறுஉண்டு. கடந்த பல ஆண்டுகளாகவே, இம்மாதிரி மிகப்பெரும் பொறுப்புகளை ஏற்பவர்கள், பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டங்களில், கருத்து முரண்பாடுகளை சந்தித்தது உண்டு. தற்போது, பேராசிரியர்கள்மற்றும் ஆசிரியர்கள் நியமனங்கள், முழுத்தகுதி அல்லது திறமை என்பதைவிட, விலை கொடுத்து வாங்கலாம்என்ற நிலை தான் உள்ளது. சற்று கவுரவமாக, கல்விப்பணியில் கழித்த பல துணைவேந்தர்கள், 'கல்வியில் அரசியல் நுழைந்ததால் தான்இந்த விபரீதங்கள்' என்று முணுமுணுத்தாலும், அதைக்கேட்டு சீராக்க, காலம் இன்னும் கனியவில்லை. கல்வி சிறக்க, பல ஆயிரம்கோடிகள் அரசால் செலவழிக்கப்படும் போது, பல்கலைக் கழக நெறி முறைகள்தவறும்போது, தீர்ப்புகள் இவைகளை சுட்டிக்காட்ட நேரிடுகிறது. அதனால், பொதுமக்களுக்கு பல விஷயங்கள் தெளிவாகின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சர், ஸ்மிருதி இரானியின் கல்வித்தகுதி பற்றி அலசப்பட்டது. பிரதமர்தன் தனிப்பட்ட அதிகாரப் பொறுப்பில், மக்கள் அளித்த தீர்ப்பின்அடிப்படையில், அமைச்சர்களை நியமிப்பதால், ஸ்மிருதி இரானி பற்றிய பரபரப்புஅடங்கியது. அதே மாதிரி அணுகுமுறைகள், கல்வி நிலையங்களில் தலைமை வகிப்போருக்கு உள்ளஅளவுகோல் அல்ல. தமிழ் இலக்கியத்தில், நிறைய கல்வி கேள்வி களில்சிறந்தவர்களை, 'சான்றோர்' என அழைப்பர். கல்வியில்தலைசிறந்த, இளைய தலைமுறையை வழிநடத்தும்திறன்மிக்க ஆசான்கள் தான், துணைவேந்தர்கள் ஆகவேண்டும். அதற்கான தேர்வு நடைமுறைகளும் வந்தால், நம் நாட்டின் பல்கலைக் கழகங்கள், உலகத் தரத்திற்கு உயரும். அதற்கான வழிகாட்டுதலாக, இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது என்றே கருதலாம்.
பல்கலைக்கழக மானியக்குழுவின், சட்ட திட்டங்கள் 2010ன்படி, 10 ஆண்டுகள், பேராசிரி யராக முறைப்படி பணியாற்றியதுடன், உரிய கல்வித் தகுதிகள் கொண்டவரை, பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கவேண்டும். மதுரை பல்கலைக் கழக, துணைவேந்தராக பணியாற்றிய கல்யாணி, இப்பதவிக்கு விண்ணப்பித்த போது, பேராசிரியர் பதவிவகித்ததாக கூறிய தகவலை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில்நடந்த இவ்வழக்கை, நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், வி.எம்.வேலுமணி விசாரித்து, இம்முடிவை அறிவித்திருக்கின்றனர். தமிழகத்தில், துணைவேந்தர் ஒருவரை பதவியில் இருந்துஅகற்ற, வழக்கு காரணமாக அமைந்தது, இதுவே முதல்முறை. அதே சமயம், தேர்வுக்குழுவை இப்புகாரில் இருந்து விடுவித்தனர். கல்யாணிமதிவாணன் உரிய கல்வித் தகுதிகொண்டவர் என்ற விளக்கத்தை ஏற்றால், பல்கலை மானியக்குழு விதிகள் செல்லாததாகி விடும்என, நீதிபதி வி.ராமசுப்ரமணியன்குறிப்பிட்டு, அவரது நியமனத்தை ஏற்கவில்லை. அதைவிட இந்திய பல்கலைக் கழகங்களில், தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூட, துணைவேந்தர் ஆகமுடியாது என்றும், அவர் குறிப்பிட்டது, இப்பிரச்னையின்பரிமாணத்தை உணர்த்துகிறது.
சென்னைபல்கலையின், சர் ஏ.லட்சுமணசாமிமுதலியார், 27 ஆண்டுகள் துணைவேந்தராக இருந்து, அப்பதவிக்கு புகழ் சேர்த்தார். மேலும், மால்கம் ஆதிசேஷய்யா உட்பட, பலர் இப்பெருமைமிகு பதவியை சிறப்பித்த வரலாறுஉண்டு. கடந்த பல ஆண்டுகளாகவே, இம்மாதிரி மிகப்பெரும் பொறுப்புகளை ஏற்பவர்கள், பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டங்களில், கருத்து முரண்பாடுகளை சந்தித்தது உண்டு. தற்போது, பேராசிரியர்கள்மற்றும் ஆசிரியர்கள் நியமனங்கள், முழுத்தகுதி அல்லது திறமை என்பதைவிட, விலை கொடுத்து வாங்கலாம்என்ற நிலை தான் உள்ளது. சற்று கவுரவமாக, கல்விப்பணியில் கழித்த பல துணைவேந்தர்கள், 'கல்வியில் அரசியல் நுழைந்ததால் தான்இந்த விபரீதங்கள்' என்று முணுமுணுத்தாலும், அதைக்கேட்டு சீராக்க, காலம் இன்னும் கனியவில்லை. கல்வி சிறக்க, பல ஆயிரம்கோடிகள் அரசால் செலவழிக்கப்படும் போது, பல்கலைக் கழக நெறி முறைகள்தவறும்போது, தீர்ப்புகள் இவைகளை சுட்டிக்காட்ட நேரிடுகிறது. அதனால், பொதுமக்களுக்கு பல விஷயங்கள் தெளிவாகின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சர், ஸ்மிருதி இரானியின் கல்வித்தகுதி பற்றி அலசப்பட்டது. பிரதமர்தன் தனிப்பட்ட அதிகாரப் பொறுப்பில், மக்கள் அளித்த தீர்ப்பின்அடிப்படையில், அமைச்சர்களை நியமிப்பதால், ஸ்மிருதி இரானி பற்றிய பரபரப்புஅடங்கியது. அதே மாதிரி அணுகுமுறைகள், கல்வி நிலையங்களில் தலைமை வகிப்போருக்கு உள்ளஅளவுகோல் அல்ல. தமிழ் இலக்கியத்தில், நிறைய கல்வி கேள்வி களில்சிறந்தவர்களை, 'சான்றோர்' என அழைப்பர். கல்வியில்தலைசிறந்த, இளைய தலைமுறையை வழிநடத்தும்திறன்மிக்க ஆசான்கள் தான், துணைவேந்தர்கள் ஆகவேண்டும். அதற்கான தேர்வு நடைமுறைகளும் வந்தால், நம் நாட்டின் பல்கலைக் கழகங்கள், உலகத் தரத்திற்கு உயரும். அதற்கான வழிகாட்டுதலாக, இத்தீர்ப்பு அமைந்திருக்கிறது என்றே கருதலாம்.
0 comments:
Post a Comment