Monday, 3 November 2014

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை,

தமிழக அரசு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் ஜி.பிரகாஷ், நகராட்சி நிர்வாகத்துறை மேலாண் இயக்குனராக சந்திரகாந்த் பி.காம்பிளேக்கு பதிலாக மாற்றப்பட்டுள்ளார். சந்திரகாந்த் பி.காம்பிளே தமிழ்நாடு சிமெண்டு கழக நிர்வாக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கோஆப்டெக்ஸ் நிறுவன நிர்வாக மேலாண் இயக்குனராக பணியாற்றும் டி.என்.வெங்கடேஷ் மறு உத்தரவு வரும் வரை கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

0 comments:

Post a Comment