Sunday, 30 November 2014

ரயில்வே காவல்துறை அறிமுகம் : வாட்ஸ் அப்.பில் புகார் அனுப்பலாம்

ரயில்வே காவல்துறையில் புதிய முயற்சியாக ரயில் பயணிகள் புகார்களை வாட்ஸ்அப் (செயலி) மூலம் உதவி மைய எண்ணுக்கு அனுப்பும் வசதியை முதல்முறையாக இருப்புபாதை காவல்துறை சென்னை கோட்டம் இன்று முதல் அறிமுகம் செய்கிறது.


வாட்ஸ்அப் மூலம் எழுத்து மூலமான புகார் களை மட்டுமின்றி படங்களாகவும், வீடியோவாகவும் அனுப்பலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது. வாட்ஸ்அப் புகார்களை அனுப்புவதற்கான எண் 9962 500 500.
இந்த தகவலை, தமிழ்நாடு இருப்புப்பாதை காவல்துறையின் சென்னை கோட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment