Friday, 28 November 2014

ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதி

பட்டதாரிமற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்விபடிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில்
பணியில் சேர்ந்த பின்எம்.பில்., பி.எச்டி., போன்ற உயர்கல்வி படித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இதனால் பலர் உயர்கல்வி படிக்கஅனுமதி கோரி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர்.
தொடக்கம், பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளிகளின்ஆசிரியர்கள் அத்துறைக்கு உட்பட்ட இணை இயக்குனர்அந்தஸ்தில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதனால்தொடக்கக் கல்வியில் சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்விஅலுவலரே அதற்கான அனுமதியை அளிக்கலாம்என உத்தரவிடப்பட்டது. இதேபோல் பட்டதாரி மற்றும்மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

0 comments:

Post a Comment