சென்னை,
தென் கடலோர மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. தென் மாவட்டங்களில் போதிய மழை பெய்துள்ளது. ஆனால் அந்த அளவுக்கு வடதமிழ்நாட்டில் மழை பெய்யவில்லை. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்யக்கூடிய ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை. எனவே அந்த ஏரிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யக்கூடிய பகுதிகளில் பலத்த மழை பெய்தால் நல்லது என்று அந்த பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் நினைக்கிறார்கள்.
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது.
இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அதிகாரி கூறியதாவது:-
இன்று மழை பெய்யும்
தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) அநேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். நாளை முதல் மழையின் தன்மை தென் மாவட்டங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
மழை அளவு
பூதப்பாண்டி 7 செ.மீ., சிதம்பரம், கடலூர், காரைக்கால் தலா 5 செ.மீ., இரணியல், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, பேச்சிப்பாறை தலா 4 செ.மீ., மணிமுத்தாறு, நாகர்கோவில், ஆணைக்காரன் சத்திரம், ஸ்ரீமுஷ்ணம், புதுச்சேரி, கீழ் கோதையாறு, சீர்காழி, மயிலாடுதுறை, தக்கலை, மயிலாடி, நெய்வேலி தலா 3 செ.மீ., வானூர், நன்னிலம், திருமயம், பாபநாசம், மரக்காணம், விழுப்புரம் தலா 2 செ.மீ., சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில், வேதாரண்யம், உளுந்தூர் பேட்டை, தென்காசி, தேவகோட்டை, திருவாரூர், குடவாசல், திருப்புவனம், சேரன்மகாதேவி, ஆடுதுறை, திருவிடைமருதூர், மதுரை, நீடாமங்கலம், கொளத்தூர், மாமல்லபுரம், கும்பகோணம், திருவாடானை, திண்டிவனம், அம்பாசமுத்திரம், விருத்தாசலம், மன்னார்குடி தலா 1 செ.மீ.
தென் கடலோர மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. தென் மாவட்டங்களில் போதிய மழை பெய்துள்ளது. ஆனால் அந்த அளவுக்கு வடதமிழ்நாட்டில் மழை பெய்யவில்லை. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்யக்கூடிய ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை. எனவே அந்த ஏரிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யக்கூடிய பகுதிகளில் பலத்த மழை பெய்தால் நல்லது என்று அந்த பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் நினைக்கிறார்கள்.
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது.
இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அதிகாரி கூறியதாவது:-
இன்று மழை பெய்யும்
தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) அநேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். நாளை முதல் மழையின் தன்மை தென் மாவட்டங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
மழை அளவு
பூதப்பாண்டி 7 செ.மீ., சிதம்பரம், கடலூர், காரைக்கால் தலா 5 செ.மீ., இரணியல், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, பேச்சிப்பாறை தலா 4 செ.மீ., மணிமுத்தாறு, நாகர்கோவில், ஆணைக்காரன் சத்திரம், ஸ்ரீமுஷ்ணம், புதுச்சேரி, கீழ் கோதையாறு, சீர்காழி, மயிலாடுதுறை, தக்கலை, மயிலாடி, நெய்வேலி தலா 3 செ.மீ., வானூர், நன்னிலம், திருமயம், பாபநாசம், மரக்காணம், விழுப்புரம் தலா 2 செ.மீ., சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில், வேதாரண்யம், உளுந்தூர் பேட்டை, தென்காசி, தேவகோட்டை, திருவாரூர், குடவாசல், திருப்புவனம், சேரன்மகாதேவி, ஆடுதுறை, திருவிடைமருதூர், மதுரை, நீடாமங்கலம், கொளத்தூர், மாமல்லபுரம், கும்பகோணம், திருவாடானை, திண்டிவனம், அம்பாசமுத்திரம், விருத்தாசலம், மன்னார்குடி தலா 1 செ.மீ.
0 comments:
Post a Comment