தமிழகம் முழுவதும், 44 மையங்களில் நடந்த குரூப் - 2 தேர்வில், 12 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சென்னை, மறைமலை நகர் அருகில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், கம்ப்யூட்டர் இயங்காததால், 40 பேர், தேர்வை எழுதவில்லை. அவர்களுக்கு, இன்று மறுதேர்வு நடத்தப்படுகிறது.
கணினி பழுது:
சென்னை, மறைமலை நகர் அருகே சட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், 300 பேர் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 270 பேர் வந்தனர்; 30 பேர் வரவில்லை.அந்த மையத்தின் ஒரு அறையில், 40 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு திடீரென, கம்ப்யூட்டர் இயங்காததால், அதிர்ச்சி அடைந்தனர்.
இன்று மறுதேர்வு: இது குறித்து, தேர்வாணைய தலைவருக்கு, அலுவலர்கள் தகவல் அளித்தனர்; பின், இரு வேளை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இன்று, இதே மையத்தில், 40 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வர் போராட்டம்:
சட்டமங்கலத்தில் கம்ப்யூட்டர் கோளாறு ஏற்பட்டதும், மையத்திற்கு எதிரே, தேர்வர், போராட்டம் நடத்தினர்.அவர்கள் அனைவரும், இன்று, தேர்வு எழுதவும், தங்கும் இடம், சாப்பாடு உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் உறுதி அளித்த பின், பகல் 2:30 மணிக்கு, தேர்வர், போராட்டத்தை கைவிட்டனர்.
கணினி பழுது:
சென்னை, மறைமலை நகர் அருகே சட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், 300 பேர் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 270 பேர் வந்தனர்; 30 பேர் வரவில்லை.அந்த மையத்தின் ஒரு அறையில், 40 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு திடீரென, கம்ப்யூட்டர் இயங்காததால், அதிர்ச்சி அடைந்தனர்.
இன்று மறுதேர்வு: இது குறித்து, தேர்வாணைய தலைவருக்கு, அலுவலர்கள் தகவல் அளித்தனர்; பின், இரு வேளை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இன்று, இதே மையத்தில், 40 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வர் போராட்டம்:
சட்டமங்கலத்தில் கம்ப்யூட்டர் கோளாறு ஏற்பட்டதும், மையத்திற்கு எதிரே, தேர்வர், போராட்டம் நடத்தினர்.அவர்கள் அனைவரும், இன்று, தேர்வு எழுதவும், தங்கும் இடம், சாப்பாடு உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் உறுதி அளித்த பின், பகல் 2:30 மணிக்கு, தேர்வர், போராட்டத்தை கைவிட்டனர்.
0 comments:
Post a Comment