Saturday, 18 October 2014

டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 பைசா குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 பைசா குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு
முதல் அமலுக்குவருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இன்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் டீசல் விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது.  மேலும் தேசிய அளவில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எரிவாயுவிற்கான புதிய விலைக்கொள்ளைக்கும்  மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின்  டீசல் விலை குறைக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் பெரும் மாற்றம் ஏற்படும்.இதன்காரணமாக  டீசல் விலையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தற்போது டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் , அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்துகளுக்கு அதிக நன்மை கிடைக்கும்.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கடந்த 2013ம்ஆண்டில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 பைசா வீதம் கடந்த 20 மாதங்களில் 19முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  அந்த குறிப்பட்ட காலத்தில் மட்டும ரூ. 11.81 பைசா விலை உயர்த்தப்பட்டது குறித்ப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment