Wednesday, 16 July 2014

என்ஜினீயர் பதவிக்கான எழுத்து தேர்வு தேர்ச்சி பட்டியலை ரத்து செய்யக்கோரி வழக்கு டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு நோட்டீசு


சென்னை, ஜூலை.17-என்ஜினீயர் பதவிக்கு நடந்த எழுத்து தேர்வு தேர்ச்சி பட்டியலை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எம்.முனீஸ்வரன் தாக்கல்
செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எழுத்து தேர்வு நான் சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளேன். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2012-ம் ஆண்டு 222 என்ஜினீயர் பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த பதவிக்கு நான் விண்ணப்பித்தேன். கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி எழுத்து தேர்வு நடந்தது. இதில், நான் கலந்துகொண்டு தேர்வு எழுதினேன். ஆனால், இந்த தேர்வு மதிப்பெண் பட்டியலை துரதிருஷ்டவசமாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிடவில்லை. ஆனால், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை கொண்ட முதல் பட்டியல் கடந்த ஜனவரி 30-ந் தேதி வெளியிடப்பட்டது.குளறுபடிஅந்த பட்டியலில் என்னுடைய பெயர் இருந்தது. அதன்பின்னர் கடந்த 7-ந் தேதி வெளியான 2-வது தேர்ச்சி பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. இந்த பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளது. முதல் பட்டியலில் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டவர்களின் பெயர்கள் எல்லாம் 2-வது பட்டியலில் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில், இந்த 2-வது தேர்ச்சி பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு வருகிற 22-ந் தேதி 25-ந் தேதி வரையிலும், அதன் பின்னர் 28-ந் தேதியும் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. ரத்து செய்ய வேண்டும்இந்த தேர்வு முறையில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே, கடந்த 7-ந் தேதி வெளியான தேர்ச்சி பட்டியலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த பட்டியலை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த எழுத்து தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் சுரேஷ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, மனுவுக்கு வருகிற 22-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment