Tuesday, 15 July 2014

மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம்: இனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை

அரசுக்குவிண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசுபதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர்அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம்கையொப்பம்(அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பதுவிதியாக
இருந்தது. இது மாணவர்கள் முதல்இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும்கடும் சிரமமாக இருந்தது.
ஒவ்வொருதடவை கையொப்பம் வாங்கும்போதும் கையொப்பமிடும் அதிகாரிக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய்வரை பணம் செலுத்தவேண்டும். இதுபொதுமக்களுக்கு சிரமத்தை தருகிறது. அதிலும் ஒரு சிலஅதிகாரிகள் சான்றிதழ் ஏதேனும் இல்லாவிட்டால் கையெழுத்திடமறுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கிராமப்புற மக்கள்பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர்.

இந்நிலையில்மக்களின் சிரமங்களை உணர்ந்து இனி வரும் காலங்களில்விண்ணப்பிப்பவரே தனது விண்ணப்பத்தில் தானேசான்றொப்ப கையெழுத்தை போட்டுகொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இந்த முறையில் கடைசி கட்ட சரிபார்ப்புபணியின்போது ஒரிஜினல் சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது. அரசின் இந்த முடிவுபொதுமக்கள் அனைவருக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அரசின் இந்த நல்ல முடிவுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும்மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment