கள்ளர்சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்களிடம் வீட்டுவாடகைப்படி பிடித்தம் செய்யும் இணை இயக்குனரின் உத்தரவிற்குமதுரை ஐகோர்ட் கிளை தடைவிதித்தது. உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி அரசுகள்ளர்
துவக்கப் பள்ளி ஆசிரியர் மரியசெல்வம்தாக்கல் செய்த மனு:மதுரை கள்ளர் சீரமைப்புத்துறை இணைஇயக்குனர் ஜூலை 4ல் ஒருஉத்தரவிட்டார். அதில் உசிலம்பட்டி, செக்கானூரணிசரகத்தில் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில்பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2009 ஜூன் முதல் 2011 டிசம்பர்வரை கூடுதல் வீட்டு வாடகைப்படிவழங்கப்பட்டுள்ளது. 19 லட்சத்து 73 ஆயிரத்து 839 ரூபாய் சம்பளத்தில் பிடித்தம்செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பளக்கமிஷன் பரிந்துரைப்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டு வீட்டுவாடகைப்படி வழங்கப்படுகிறது. பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிப்பதற்குமுன் எங்களிடம் விளக்கம் கோரவில்லை. இணை இயக்குனரின் உத்தரவைரத்து செய்ய வேண்டும். இவ்வாறுகுறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment