அனைத்துவகை பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய பாதுகாப்புச் சட்டங்களை தமிழக அரசு இயற்ற வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
சென்னை கோடம்பாக்கம் லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாஸ்கர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியை மீது தொடுக்கப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் அமைப்பாளர் கு.பூபாலன் பேசியது:
பள்ளி வளாகங்களில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தக் கூடிய உரிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி முறைதான் இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமாக உள்ளது. எனவே அதில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.
சென்னை லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குள் ஆள்களை அனுப்பி ஆசிரியரைத் தாக்கிய அருளானந்தம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெறாத வகையில் அந்த நடவடிக்கை இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மீது தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எத்திராஜுலு பேசும்போது, வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகளில் 95 சதவீத தேர்ச்சி இலக்கு நிர்ணயித்துள்ளதாகப் பள்ளிக் கல்வி செயலாளர் சபிதா தெரிவித்துள்ளார். இத்தகைய இலக்கு ஆசிரியர்கள் மீதும், மாணவர்கள் மீதும் தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.என்.ஜெனார்த்தனன் பேசியபோது, அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றார்.
சென்னை கோடம்பாக்கம் லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாஸ்கர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியை மீது தொடுக்கப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் அமைப்பாளர் கு.பூபாலன் பேசியது:
பள்ளி வளாகங்களில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தக் கூடிய உரிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி முறைதான் இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமாக உள்ளது. எனவே அதில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.
சென்னை லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குள் ஆள்களை அனுப்பி ஆசிரியரைத் தாக்கிய அருளானந்தம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெறாத வகையில் அந்த நடவடிக்கை இருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மீது தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எத்திராஜுலு பேசும்போது, வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகளில் 95 சதவீத தேர்ச்சி இலக்கு நிர்ணயித்துள்ளதாகப் பள்ளிக் கல்வி செயலாளர் சபிதா தெரிவித்துள்ளார். இத்தகைய இலக்கு ஆசிரியர்கள் மீதும், மாணவர்கள் மீதும் தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.என்.ஜெனார்த்தனன் பேசியபோது, அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment