இஸ்ரோ தலைவர் பதவியிலிருந்து ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்றார்.
இஸ்ரோ தலைவர் பதவியிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக ஷைலேஷ் நாயக் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக கடந்த 2009-ம் ஆண்டு பொறுப்பேற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவிக்காலத்தில், பி.எஸ்.எல்.வி, மங்கள்யான், ஜி.எஸ்.எல்.வி., இன்சாட், ஜிசாட் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பத்தின் பல செயற்கைகோள்களும், ஏவுகணைகளும் இவரின் முயற்சியால் விண்ணில் ஏவப்பட்டன. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருதை வென்றுள்ள ராதாகிருஷ்ணன், 2014 ஆம் ஆண்டின் சிறந்த பத்து விஞ்ஞானிகளில் ஒருவராக பிரபல அறிவியல் இதழான நேச்சர் தேர்வு செய்தது.
செவ்வாய் கோளுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், முதல் முயற்சியிலேயே, அதன் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது ராதாகிருஷ்ணனின் சாதனை மகுடத்தில் ஒரு வைரக்கல்லாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ தலைவர் பதவியிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக ஷைலேஷ் நாயக் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவராக கடந்த 2009-ம் ஆண்டு பொறுப்பேற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவிக்காலத்தில், பி.எஸ்.எல்.வி, மங்கள்யான், ஜி.எஸ்.எல்.வி., இன்சாட், ஜிசாட் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பத்தின் பல செயற்கைகோள்களும், ஏவுகணைகளும் இவரின் முயற்சியால் விண்ணில் ஏவப்பட்டன. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருதை வென்றுள்ள ராதாகிருஷ்ணன், 2014 ஆம் ஆண்டின் சிறந்த பத்து விஞ்ஞானிகளில் ஒருவராக பிரபல அறிவியல் இதழான நேச்சர் தேர்வு செய்தது.
செவ்வாய் கோளுக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், முதல் முயற்சியிலேயே, அதன் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது ராதாகிருஷ்ணனின் சாதனை மகுடத்தில் ஒரு வைரக்கல்லாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment