Saturday, 27 December 2014

திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துதமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்தஆர். கிர்லோஷ் குமார் நகர் மற்றும்ஊர்
அமைப்பு திட்டத் துறைஇயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


திருச்சிமாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன்கூட்டுறவு துறை பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியராக இருந்தபழனிச்சாமி, திருச்சி மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல்மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடாச்சலம் தேனிமாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல, விருதுநகர் மாவட்டஆட்சியராக இருந்த ஹரிஹரன் திண்டுக்கல்ஆட்சியராகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்தராஜாராமன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியராக இருந்த முனுசாமி சிவகங்கைமாவட்ட ஆட்சியராகவும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு புதிய ஆட்சியராக எஸ்பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment