Tuesday, 30 December 2014

சிறப்பு ஆசிரியர்களுக்கான‌ சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்,
உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சிறப்பு குழந்தைகள் பலர் படித்து வருகிறார்கள். இந்த குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு 2013-14-ம் ஆண்டு சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது.

      இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, நேற்று 2013-14-ம் ஆண்டுக்கான சம்பளம் அந்தந்த ஆசிரியர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், 2014-ம் ஆண்டு முதல் இதுவரை வழங்கப்படாத சம்பளமும் விரைவில் வழங்கப்பட உள்ளது.

இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment