''ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு என்பது காசாய்வாக முடிகிறது'' என, தமிழ்நாடு ஆசிரியர் மன்ற செயலர் மீனாட்சிசுந்தரம்
குற்றஞ்சாட்டியுள்ளார்.திருவாரூரில், அவர் கூறியதாவது: தமிழக தேர்தல் ஆணையரைசந்தித்து, பல கோரிக்கைகளை வைத்துள்ளோம். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை வைத்துள்ள பெண்கள், இதய நோயாளிகள் ஆகியோருக்கு, தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; பாதுகாப்பான போக்குவரத்து வசதியுள்ள நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே, பெண்களை தேர்தல் பணியில்அமர்த்த வேண்டும். தேர்தலில் பணிபரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான மதிப்பூதியத்தைஇரட்டிப்பாக்க வேண்டும், இவை தான் எங்கள்கோரிக்கைகள். வகுப்புகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்தால், ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு மிரட்டுகிறது. ஒன்றாம்வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புவரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சிபெற்றவர்களாக அறிவிக்க, அரசு கூறுகிறது. ஒன்பதாம்வகுப்பு வரை, பள்ளி பாடங்களைச்சரியாக படிக்காதவர்கள், 10ம் வகுப்பு தேர்வுஎழுதும் போது, எப்படி தேர்ச்சிபெற முடியும். தனியார் பள்ளிகளில், தேர்ச்சிசதவீதம் அதிகரிக்க, 10ம் வகுப்பு அரசுதேர்வு எழுதும் மாணவர்களை, 9ம்வகுப்பில் 10ம் வகுப்பு, பிளஸ்2 அரசு தேர்வு எழுதவுள்ள மாணவர்களை, பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை படிக்கவைக்கின்றனர். இதுபோன்ற நிலை, அரசு பள்ளிகளில்இல்லை. கணினி மூலம், ஆசிரியர்களுக்குகலந்தாய்வு பணியிட மாற்றம் செய்வதாக, அரசு சொல்கிறது. ஆனால், கலந்தாய்வு முறைஎன்பது, காசாய்வு முறையாகிவிட்டது. அங்கு பணம் விளையாடுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
0 comments:
Post a Comment