தஞ்சாவூர்மாவட்டம் மதுக்கூர் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில்பட்டதாரி ஆசிரியராக இருந்த வி.வையணன், கலந்தாய்வு
மூலம்தூத்துக்குடி மாவட்டம் கடல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குபணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த2012-ஆம்ஆண்டு ஜனவரி மாதம் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியராக (உயிரியல்)பதவி உயர்வு பெறுவதற்குவையணன் தகுதியானார்.
இதைத் தொடர்ந்து, ஜூன் 24-ஆம் தேதிமுதல் நடைபெற்று வரும் கலந்தாய்வில் மனுதாரரைபங்கேற்க அனுமதிக்க வேண்டும். மேலும், இந்தப் பணியிடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும் எனநீதிபதி உத்தரவிட்டார்.
இந் நிலையில் 2012-13- ஆம் ஆண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளியாக தரம்உயர்த்தி அரசு உத்தரவிட்டது. அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 4 அரசு மேல்நிலைப்பள்ளிகளில்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (உயிரியல்) காலியாகஇருந்தன. அந்தக் காலிப்பணியிடங்கள் கலந்தாய்வின்போதுவெளிப்படுத்தப் படவில்லை. அதனால், வையணனுக்கு ராமநாதபுரம்மாவட்டத்துக்கு மாறுதல் வழங்கப்பட்டது. கலந்தாய்வின்போது திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக இருந்த 3
பணியிடங்கள்குறித்து அறிவிக்கவில்லை. அதனால்,திருநெல்வேலி சுத்தமல்லிஅரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்ய உத்தரவிடக்கோரி வையணன் உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார். அதில், அந்தப் பள்ளியில்வேறு யாரையும் பணியமர்த்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. ஆனால், அந்தப் பணியிடம்முன்னதாகவே நிரப்பப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறைகூறியதையடுத்து,மனுதாரரின் கோரிக்கையை விதிகளுக்குள்பட்டு பரிசீலிக்க வேண்டும் எனஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில், கடந்த ஆண்டு ஜூலைமாதம் 20 மற்றும் 22-ஆம் தேதிகளில்முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வின்போது தூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்த காலிப் பணியிடம் காண்பிக்கப்படவில்லை. அந்தக் காலியிடத்தை கலந்தாய்வில் காட்டாமலேயே பள்ளிக் கல்வித் துறைநிரப்பியுள்ளது. இந்த உத்தரவை ரத்துசெய்து விட்டு, புதிதாக
பணியிடமாறுதல் கலந்தாய்வை நடத்த உத்தரவிடுமாறு வையணன்மற்றுமொரு வழக்கைத் தாக்கல் செய்தார். இந்தமனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன்முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அந்தப்பள்ளியில் ஏற்கெனவே ஒருவர் நியமிக்கப்பட்டு விட்டார். அதனால் அவரை தொந்தரவு செய்யவேண்டாம் எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஜூன் 24-ஆம் தேதிமுதல் நடைபெற்று வரும் கலந்தாய்வில் மனுதாரரைபங்கேற்க அனுமதிக்க வேண்டும். மேலும், இந்தப் பணியிடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும் எனநீதிபதி உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment