Tuesday, 2 December 2014

CPS ஒப்புகை சீட்டு வழங்க & சரிபார்க்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது

CPS ஒப்புகை சீட்டு வழங்க & சரிபார்க்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன.தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுள்ளதா?? தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில்( CPS ) 01.04.2003 பின் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது.

இதனை மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் கவனத்திற்கு 10.09.2014 அன்று நேரில் SSTA மாநில பொறுப்பாளர்கள் கொண்டு சென்றனர்.இயக்குனர் அவர்கள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014 உத்தரவிட்டார்.SSTAவின் சீரான முயற்சிகள் மூலம் பல ஆண்டுகளாக வழங்கப்படமால் இருந்த ஒப்புகைசீட்டு கிடைக்க வழிமேற்கொள்ளப்பட்டது .இதன் மூலம் அனைத்து கருவுலம் வழியாக உதவி தொடக்க கல்வி அலுலகங்களுக்கு ஒப்புகைசீட்டு குறுந்தகடு (CD) மூலம் அனுப்பப்பட்டது ,இது கிடைக்கப்பெற்று 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவுகள் ஏதேனும் இருப்பின் அல்லது சில நபர்கள் மொத்தமாக பதிவுகள் இல்லை என்றாலும் உடனே கருவூலம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.அக்காலக்கெடு வரும் டிசம்பர் -10 ம் தேதி முடிவடைகிறது அதன் பின் இப்போது உள்ள பதிவுகள் சரியாக உள்ளது என்று அரசால் ஏற்றுக்கொள்ள படும் .தற்போது பெரும்பாலான ஒன்றியங்களில் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது,ஒப்புகை சீட்டு வழங்கபடவில்லை என பல இயக்க நண்பர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர் அப்பட்டியல் மாநில தலைமையால் 13.11.2014 அன்று இயக்குநரகத்தில் ஒப்படைக்கப்பட்டது உடனே அதில் குறிப்பிட்ட ஒன்றியத்திற்க்கு இயக்குநரகத்தில் இருந்து தொடர்பு கொண்டு உடனே வழங்க அறிவுறுத்தப்பட்டது ,ஆனால் இன்னும் ஒரு சில ஒன்றியங்களில் இதுகுறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டாமல் உள்ளன, தங்களின் ஒன்றியத்தில் வழங்கப்படாமல் இருப்பின் உடனடியாக எங்களுக்கு தகவல் அளியுங்கள் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு A/C SLIP வழங்க நடவடிக்கை மேற்கொள்கிறோம் தாமதம் வேண்டாம்,இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது.

0 comments:

Post a Comment