2014–2015–ம்கல்வி ஆண்டிற்கான பணியிட நிர்ணய ஆணையைஉடனே வெளியிட வேண்டும், ஆசிரியர்தகுதி தேர்வு முதன் முதலாகநடைபெற்ற 12.7.2012–க்கு முன்பு நியமனம்செய்யப்பட்ட ஆசிரிய–ஆசிரியைக்கு பணிநியமன ஏற்பாணை வழங்க வேண்டும்,பணி பாதுகாப்பு வழங்க
வேண்டும் என்பதைவலியுறுத்தி கடந்த சில மாதங்களாகஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம், முற்றுகைபோராட்டங்களை நடத்தினார்கள். இன்று ஆசிரியர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பைவெளிப்படுத்தினார்கள்.
நாகர்கோவில்கார்மல் பள்ளி முன்பு நடந்தகண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மாவட்ட ஆசிரியர்இயக்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ஜெரோம் தலைமை தாங்கினார். கார்மல் பள்ளி உதவி தலைமையாசிரியர்கள்பாதிரியார் பாஸ்டின், மெலோடியஸ் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தைதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர்ஜாண் உபால்டு தொடங்கி வைத்தார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கல்வி மாவட்டபொறுப்பாளர் ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில்பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள்கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.
இதேபோல்நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பல்வேறுபள்ளிகள் முன்பும் ஆசிரியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.






0 comments:
Post a Comment