Saturday, 2 August 2014
Friday, 1 August 2014
60,000 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம்
தொடக்க வேளாண்மை சங்கத்தின், 60,000 பணியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம், விரிவுபடுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துஉள்ளார்.
சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நுகர்வோர் பண்டகசாலைகள், விற்பனை சங்கங்களில் பணிபுரியும், 60,000 பணியாளர்களுக்கும், விரிவுபடுத்தப்படும். காப்பீட்டு கட்டணம், 12.54 கோடியை, பணியாளர்கள் ஏற்றுக் கொள்வர்.100 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின், முகப்புத் தோற்றத்தை பொலிவூட்டுதல், பெட்டக வசதி, குளிர்சாதன வசதி ஆகிய கட்டமைப்பு வசதிகள், 6.90 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்.மத்திய கூட்டுறவு வங்கிகளின், 18 கிளைகளிலும், இதேபோன்ற உள் கட்டமைப்பு வசதிகள், 12.60 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்.மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், 19 கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் சார்பில், இரு கிளைகள் புதிதாகத் துவங்கப்படும்.கூட்டுறவு வங்கிகளின் சேவைகளை, மொபைல் போன் மூலம் பெறும் வசதி, ஒரு கோடி ரூபாய் செலவில், அறிமுகம் செய்யப்படும்.பழங்குடி மக்களுக்குத் தேவையான, வேளாண் இடு பொருட்களை அளிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்ட தொல் பழங்குடியினர் பல்நோக்கு கூட்டுறவு சங்கம், கோத்தகிரி வட்ட மலைவாழ் பழங்குடியினர் பல்நோக்கு கூட்டுறவு சங்கம்; தர்மபுரி மாவட்டம், சிட்டிலிங்கி மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியவை துவங்கப்படும்.
சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நுகர்வோர் பண்டகசாலைகள், விற்பனை சங்கங்களில் பணிபுரியும், 60,000 பணியாளர்களுக்கும், விரிவுபடுத்தப்படும். காப்பீட்டு கட்டணம், 12.54 கோடியை, பணியாளர்கள் ஏற்றுக் கொள்வர்.100 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின், முகப்புத் தோற்றத்தை பொலிவூட்டுதல், பெட்டக வசதி, குளிர்சாதன வசதி ஆகிய கட்டமைப்பு வசதிகள், 6.90 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்.மத்திய கூட்டுறவு வங்கிகளின், 18 கிளைகளிலும், இதேபோன்ற உள் கட்டமைப்பு வசதிகள், 12.60 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்.மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், 19 கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் சார்பில், இரு கிளைகள் புதிதாகத் துவங்கப்படும்.கூட்டுறவு வங்கிகளின் சேவைகளை, மொபைல் போன் மூலம் பெறும் வசதி, ஒரு கோடி ரூபாய் செலவில், அறிமுகம் செய்யப்படும்.பழங்குடி மக்களுக்குத் தேவையான, வேளாண் இடு பொருட்களை அளிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்ட தொல் பழங்குடியினர் பல்நோக்கு கூட்டுறவு சங்கம், கோத்தகிரி வட்ட மலைவாழ் பழங்குடியினர் பல்நோக்கு கூட்டுறவு சங்கம்; தர்மபுரி மாவட்டம், சிட்டிலிங்கி மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியவை துவங்கப்படும்.
அரசு கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணி : ஆக.,20 முதல் விண்ணப்பம்
அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல், சட்டக் கல்லூரிகளில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு விண்ணப்ப வினியோகம், சி.இ. ஓ., அலுவலங்களில் வினியோகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு கலை அறிவியல், பொறியியல், சட்டக்கல்லூரிகளில் காலியாக இருக்கும் 200க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர், விரிவுரையாளர்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் நியமிக்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆக.,20 முதல் செப்.,15 வரை, ரூ.100 கொடுத்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.முதன்மைக் கல்வித்துறையினர் கூறுகையில், "அரசு கல்லூரி விரிவுரையாளர் பணிக்கானதேர்வுக்குரிய விண்ணப்பங்கள் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அடுத்த வாரம் வரலாம், என எதிர்பார்க்கிறோம். கூடுதல் விவரங்களை டி.ஆர்.பி.,இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்,” என்றனர்.
தமிழகத்தில் அரசு கலை அறிவியல், பொறியியல், சட்டக்கல்லூரிகளில் காலியாக இருக்கும் 200க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர், விரிவுரையாளர்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் நியமிக்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆக.,20 முதல் செப்.,15 வரை, ரூ.100 கொடுத்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.முதன்மைக் கல்வித்துறையினர் கூறுகையில், "அரசு கல்லூரி விரிவுரையாளர் பணிக்கானதேர்வுக்குரிய விண்ணப்பங்கள் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அடுத்த வாரம் வரலாம், என எதிர்பார்க்கிறோம். கூடுதல் விவரங்களை டி.ஆர்.பி.,இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்,” என்றனர்.
இன்று பி.எட் தேர்வு முடிவுகள் வெளியீடு.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைத்தின் பி.எட். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. பி.எட். தேர்வு முடிவுகளை www.tnteu.in என்ற இணையதளத்தில் காணலாம்.
அண்ணாபல்கலைக்கழக கல்லூரிகள் உள்பட என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின பொது கலந்தாய்வு 4-ந்தேதி முடிகிறது
சென்னை, ஆக.2-என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கின. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு சென்றனர்.
ஆனால் இன்னும் பொது கலந்தாய்வு முடியவில்லை. கலந்தாய்வு 4-ந்தேதிதான் முடிவடைகிறது. கலந்தாய்வுதமிழ்நாட்டில் 541 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில மாணவர்களை பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டு சேர்ப்பதற்கான பொது கலந்தாய்வு கடந்த ஒரு மாதமாக அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. வகுப்பு தொடங்கியதுமொத்தம் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரத்து 77 இடங்களில் 95 ஆயிரம்பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். கலந்தாய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்தும் 48 ஆயிரம் பேர் இதுவரை வரவில்லை. மாணவர்சேர்க்கை 33 சதவீதம். கலந்தாய்வு முடிய இன்னும் 2 நாட்கள் இருந்த நிலையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி ஆகஸ்டு 1-ந்தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க அண்ணாபல்கலைக்கழகம் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை விடுத்தது. அதையொட்டி நேற்று ஏராளமான என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம்ஆண்டு சேர்ந்த பி.இ., பி.டெக் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கின. அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியிலும் முதலாம் ஆண்டு நேற்று தொடங்கப்பட்டது. நேற்று மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வகுப்புகளுக்குச் சென்றனர். பல கல்லூரிகளில் உள்ள முதல்வர்கள் ‘ராக்கிங்கில் ஈடுபடாதீர்கள்‘ என்று மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள். ராக்கிங்கில் ஈடுபட்டால் என்ன? என்ன தண்டனை? என்றும் அதனால் வாழ்க்கை வீணாக போகும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.6, 7 தேதிகளில் கலந்தாய்வுகலந்தாய்வு 4-ந்தேதி முடிந்தாலும். பிளஸ்-2 தேர்வில் பெயிலான மாணவர்கள் உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியாக கலந்தாய்வு 6-ந்தேதி நடத்தப்பட உள்ளது. அதற்காக மாணவ-மாணவிகள் அண்ணாபல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து 5-ந்தேதி காலை 9மணி முதல் மாலை 5-30மணிவரை பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.அண்ணாபல்கலைக்கழக கலந்தாய்வில் அருந்ததியின மாணவ-மாணவிகளுக்கு ஓதுக்கப்பட்ட இடங்களில் நிரம்பாமல் சில இடங்கள் காலியாகக்கிடக்கின்றன. அந்த இடங்களில் எஸ்.சி. இன மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வு 7-ந்தேதி நடக்கிறது. விருப்பம் உள்ள எஸ்.சி. மாணவ-மாணவிகள் 7-ந்தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணிவரை தங்கள் பெயரை பதிவு செய்து பின்னர் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். ஏற்கனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களும் கலந்தாய்வுக்கு வரலாம்.இந்த தகவலை அண்ணாபல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)










