This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 29 July 2014

பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசுபள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.


ஆசிரியர் தகுதித் தேர்வில் (2-வது தாள்) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த 43,243 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதா ரர்கள் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் வந்தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளி யிடப்பட்டதை தொடர்ந்து, இறுதி தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித் திருந்தது. 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தேர்வுப் பட்டியல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறும்போது, ‘‘இறுதி தேர்வுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் வெளியிடப்பட லாம். ஒருவேளை புதன்கிழமை வெளியிடப்படாவிட்டால் மறுநாள் அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி கட்டாயம் வெளியிடப்படும்’’ என்றார்.

எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவிக்கு, பாரத ஸ்டேட் வங்கி கல்வி கடன் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை, ஜூலை.30-எம்.பி.பி.எஸ். படிக்கும் ஏழை மாணவிக்கு கல்வி கடன் வழங்கவேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், சி.மீனாட்சி என்பவர் தாக்கல்
செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-கல்வி கடன்நான் ஏழை ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கடந்த 2009-ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்தேன்.ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 83 ஆயிரத்து 560 வீதம் 4 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். 5-வது ஆண்டில் ரூ.1.96 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை தெரிந்தவர்களிடம் கடனாக பெற்று கட்டிவிட்டேன். ஆனால், அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால், பாரத ஸ்டேட் வங்கியில், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால், வங்கி நிர்வாகம் எனக்கு ரூ.4 லட்சம் மட்டும் கடன் வழங்கியது.அரசாணைஎனவே, எனக்கு முழு கட்டணத்தையும் கடனாக வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு உட்பட்ட எஸ்.சி., எஸ்.டி. குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்விக் கட்டணத்தை அரசு வழங்கிடும் என 2012-ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பரிசீலிக்க வேண்டும்கல்விக் கட்டணத்தை அரசே வழங்குவதால், முழு கட்டணத்தையும் மனுதாரருக்கு வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், அந்த அரசாணை 2012-ம் ஆண்டுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 2009-ம் ஆண்டு முதலே எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். எனவே கடன் வழங்க வங்கி நிர்வாகம் மறுக்க முடியாது. மனுதாரர் புதிதாக கடன் கேட்டு விண்ணப்பம் செய்யவேண்டும். அந்த விண்ணப்பத்தை வங்கி நிர்வாகம் 2 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் என்ஜினீயரிங் இடங்கள் 50 சதவீதம் மட்டுமே நிரம்புகின்றன 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகக் கிடக்கின்றன


சென்னை, ஜூலை.30-அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைகிறது. என்ஜினீயரிங் இடங்கள் 50 சதவீதம் மட்டுமே நிரம்புகின்றன. கலந்தாய்வு முடிவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக் கிடக்கும் நிலைமை
உள்ளது.என்ஜினீயரிங் கலந்தாய்வுதமிழ்நாடு முழுவதும் உள்ள 541 என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பி.இ. சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த கலந்தாய்வுக்கு கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் 2 லட்சத்து 4 ஆயிரத்து 79.அந்த இடங்களுக்கு கடந்த ஒரு மாதமாக பொது கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து கலந்தாய்வில் கலந்துகொண்டு மதிப்பெண் எடுத்ததற்கு ஏற்ற வகையில் கல்லூரியையும், பி.இ. படிப்பில் குரூப்பையும் தேர்ந்து எடுத்து செல்கிறார்கள்.முதல் இடம்மெக்கானிக்கல் பிரிவை 19 ஆயிரத்து 418 மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுத்துள்ளனர். இது கலந்தாய்வில் முதல் இடம் வகிக்கிறது. அடுத்து எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவு 2-வது இடத்தில் உள்ளது. அந்த பிரிவை 15 ஆயிரத்து 653 பேர் எடுத்துள்ளனர். சிவில் பிரிவை 12 ஆயிரத்து 262 பேர் தேர்ந்து எடுத்திருக்கிறார்கள்.இந்த கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைகிறது. அன்று கட் ஆப் மதிப்பெண் 200-க்கு 77.5 வரை அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 26 பேர். அவர்களில் 37 ஆயிரத்து 619 பேர் வரவில்லை. இது 31.6 சதவீதம். கலந்தாய்வுக்கு வந்துவிட்டு இடத்தை தேர்ந்து எடுக்காதவர்கள் 324 பேர். கலந்தாய்வு இன்னும் 6 நாட்கள் தான் நடைபெற உள்ளன. 50 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பும் கலந்தாய்வு முடிகிற அன்று கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரத்து 79 இடங்களில் 50 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கும். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக்கிடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர பல கல்லூரிகளில் 1 அல்லது 2 மாணவர்களே சேர்ந்துள்ளனர்.ஆனால் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேராத சில கல்லூரிகளில், கல்வி கட்டணத்தை குறைப்பதால் நிர்வாக ஒதுக்கீட்டில் கணிசமான மாணவ-மாணவிகள் சேர்ந்ததாக கூறப்படுகிறது. கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைந்தாலும் அதற்கு முன்பாகவே 1-ந் தேதி பெரும்பாலான என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குகின்றன.

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் கருகி பரிதாப சாவு தமிழகத்தை உலுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு கைதான கல்வி இலாகா அதிகாரிகள் உள்பட 21 பேர் தஞ்சை கோர்ட்டில் ஆஜர்


தஞ்சாவூர், ஜூலை.30-94 பிஞ்சு குழந்தைகள் கருகி பலியான கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.நாட்டை உலுக்கிய விபத்துதமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி நடந்தது.
அன்று நடைபெறப் போகும் அசம்பாவிதத்தை அறியாமல் வழக்கம்போல குழந்தைகளும், சிறுவர்களும் குதூகலமாக பள்ளிக்கு சென்றனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி தான் அது. இந்த பள்ளியில் அன்று மதிய உணவிற்காக சமையல் செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் பிடித்த தீ, பள்ளி கட்டிடத்திற்கும் வேகமாக பரவியது. 94 குழந்தைகள் பலிபள்ளியின் மேல்மாடியில் இயங்கி வந்த கூரை வேயப்பட்ட வகுப்பறை கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மாணவ-மாணவிகள் வேகமாக வெளியேற போதிய இடவசதியும் அங்கு இல்லை. இதனால் அந்த அறையில் இருந்த 94 குழந்தைகள் தப்ப முடியாமல் உடல் கருகி மடிந்தார்கள். 18 குழந்தைகள் பலத்த காயம் அடைந்து, தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்திய இந்த கொடூர விபத்து தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர். குறுகலான அந்த கட்டிடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மகளிர் உயர்நிலைப்பள்ளி என 3 பள்ளிகள் இயங்கி வந்தது. 3 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 700 மாணவ-மாணவிகள் படித்துவந்தனர். அங்கு போதிய பாதுகாப்பு வசதியும், தீயணைப்பு கருவிகளும் இல்லாதது தெரியவந்தது.24 பேர் கைதுஅந்த பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிசாமி, பள்ளி தாளாளரான அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பி.பழனிச்சாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகிய 24 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.பல்வேறு பிரிவுகளில் வழக்குஅவர்கள் மீது 304 (கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல்), 120பி (சதிச்செயல்), 338 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல்) மற்றும் சிறுவர் நீதி சட்டம், தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டம், மாநகராட்சி சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் 488 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு இந்த வழக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.விசாரணை முடிந்ததுமாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோர் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடக்கக்கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.விபத்து நடந்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் காயத்துடன் உயிர்தப்பிய குழந்தைகள், பலியான குழந்தைகளின் பெற்றோர், அப்போதைய கலெக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட 230 பேர் சாட்சியம் அளித்தனர்.அரசுதரப்பு சாட்சிகள் விசாரணை மார்ச் 28-ந் தேதி முடிவடைந்தது. பின்னர் இருதரப்பு வக்கீல்கள் வாதம் நடைபெற்றது. 22 மாதங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 17-ந் தேதி முடிவடைந்தது. இன்று தீர்ப்புஇந்த கொடூர சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி தீர்ப்பை வழங்குகிறார். இந்ததீர்ப்பை நாடே பரபரப்புடன் எதிர்பார்த்து இருக்கிறது.இந்த விபத்தில் காயமடைந்து உயிர்தப்பிய குழந்தைகளின் தழும்புகளும் மறையவில்லை. உயிர்நீத்த குழந்தைகளின் நினைவுகளும் அவர்களது பெற்றோர் மனதில் இருந்து நீங்கவில்லை.இந்த தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கூறும்போது, ‘‘எங்கள் குழந்தைகள் இறந்தபோது தொலைந்துபோன எங்கள் சந்தோஷம் இதுவரை திரும்ப கிடைக்கவில்லை. தீ விபத்துக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த தீர்ப்பு, பாதுகாப்பு இல்லாமல் மோசமான பள்ளிகளை நடத்தும் நிர்வாகத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்’’ என்றனர்.இன்று தீர்ப்பு கூறப்படுவதையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் கல்வி அதிகாரிகள் உள்பட 21 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்கள். அதோடு தீர்ப்பை எதிர்பார்த்து ஏராளமானவர்களும் நீதிமன்றத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் புது திட்டம்: அரசு பள்ளி மாணவியர் சாதனை நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் புது திட்டம்: அரசு பள்ளி மாணவியர் சாதனை

நிலத்தடிநீர்மட்டத்தை மேம்படுத்த, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பைகட்டாயப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இது, மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர, அரசு பள்ளிமாணவர்களுக்கு,
சமீபத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.இதில், குளங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நீராதாரத்திற்கு வழிவகை செய்ய, மெகாபட்ஜெட்டில் திட்டம் தீட்டிய, ஒண்டிப்புதூர்அரசு பள்ளி மாணவியர், சவுமியாமற்றும் லதாவுக்கு, முதல் பரிசு கிடைத்தது.
பரிசு பெற்ற மாணவியரை, தனியாகசந்தித்து பேசியபோது...''நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் எனும் தலைப்பில், அறிவியல்கண்காட்சி என்றதுமே, மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தோம். ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு, தெர்மாகோலில் வடிவமைப்பு கொடுப்பதை விட, புது திட்டத்தைஅமல்படுத்தலாம் என்று முடிவானது. உடனே, இன்டர்நெட் பட்டனை தட்ட, நதிநீர்இணைப்பு குறித்து படித்தோம். இது, இந்தியாவுக்கான மெகாபிளான்.கோவையில் இருக்கும், குளங்களை இணைக்கற திட்டத்தை பற்றியோசிப்போம் என, களத்தில் குதித்தோம். ஆதரவாக, சவுமியாவின் அப்பா செந்தில்குமார் மற்றும்பள்ளி ஆசிரியர்களின், துணை கிடைத்தது. இதுவரை, குளங்களை இணைக்க போட்ட பிளான்குறித்து, நிறைய தகவல்களை சேகரிச்சோம். ஏதோ நடைமுறை சிக்கல் இருப்பதைஉணர்ந்து, நீராதார வழிதடங்கள் குறித்த, வரைபடம் உருவாக்கினோம்.இதில், மேட்டுப்பாளையம் வழியாகசெல்லும், கீழ்பவானி அணை ஆற்றுநீரையும், ஆழியாறுஅணையில் இருந்து வரும் நீரையும், நொய்யல் ஆற்றுப்பாதையுடன், இருகூர் மற்றும் வெள்ளலூர்பகுதிகளில் இணைப்பது குறித்து திட்டமிட்டோம். இதில், இருவேறு பகுதிகளில்இருந்து வரும் நீரை, நொய்யலுக்குகொண்டு வருவதற்கான மாதிரி பாதை உருவாக்கப்பட்டது.

கீழ்பவானிஆற்றுநீரை, சிறுமுகை அருகில் இருந்து திருப்பி, தென் திருப்பதி, காரமடை பின்பகுதி, நீலாம்பூர்வழியாக, இருகூரில் இணைப்பதற்கு, கிட்டத்தட்ட 55 கி.மீ., தூரம்விவசாய நிலங்களில் பாதை உருவாக்க முடியும். இதேபோல், ஆழியாறு அனை நீரை, பொள்ளாச்சி அருகில் இருந்து திருப்பி, கிணத்துக்கடவு, மலுமிச்சம்பட்டி, செட்டிப்பாளையம் வழியாக, வெள்ளலூரில் இணைப்பதற்கு, கிட்டத்தட்ட 55 கி.மீ.,பாதைஉருவாக்க வேண்டும். இந்த இருகூர் மற்றும்வெள்ளலூர், ஆற்றுநீரால், ஒரத்துப்பாளையம் வரையுள்ள, குளங்கள், ஆறுகளுக்கு நீர் கிடைக்க வழிவகைசெய்ய முடியும்.இந்த திட்டத்திற்கு, 110 மீட்டர்நீளம், 50 மீட்டர் அகலம், மூன்றுமீட்டர் ஆழம் கொண்ட பாதைஉருவாக்க, 185 கோடி ரூபாய் செலவாகும். இதேபோல், நீராதாரங்களுக்காக இணைக்கப்படும் குளங்கள், குட்டைகளை, தூர்வாரி, குழாய் அமைக்க, 55 கோடிரூபாய், நொய்யல் ஆற்றை தூர்வாரி, சுற்றுப்புறங்களை வலுப்படுத்த, 35 கோடி ரூபாய் என, மொத்தத்தில், 275 கோடி ரூபாய் திட்டமதிப்பீடாககணக்கிடப்பட்டுள்ளது. இதையே, வல்லுனர்கள் மேலும்எளிமையாக்கி, செயல்படுத்தினால் நீராதாரங்களை அதிகப்படுத்த முடியும்...இப்படி மூச்சு விடாமல், பேசி முடித்தனர், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர்.

குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை

இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித்திட்டப்படிஇரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப்படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்ற பிறகுடி..டி. (T.E.T.) ஆசிரியர்தகுதித் தேர்வு தேர்வில் அதிகமதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால்அரசு ஆரம்பப்
பள்ளிகளில் ஆசிரியராகப்

பணியாற்றமுடியும்.(இப்படி ஒரு வடிகட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வுமுறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்). இதில் எத்தனை வழக்குகள், தேவையற்றவிமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலிஇவற்றைஅடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும்அரசுகள். இப்போதும் காலந்தாழ்ந்து விடவில்லை

முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மைவாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு செயல் பட்டால் அதுபல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும்என்பது உறுதி.

1. இடைநிலை ஆசிரியர் நியமனம் சரியாக நடைபெறாதது.

2. பல்வேறுபோட்டிகளைச் சந்திக்க வேண்டிய வயதான ஆசிரியர்களின்பரிதாப நிலை.இவை காரணமாகஇப்படிப்பிற்குரிய கிராக்கி தேவை (Demand) குறைவதால், ஆசிரியர்  பயிற்சிபள்ளிகளை மூட வேண்டிய கொடுமையானநிலை! மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் மாறுதல் தேவை! மாணவர்ஆசிரியர் விகிதாசாரம் 1:30 என்பதைக் கடைப்பிடித்தால், ஆசிரியர்கள் தேவையும் அதன் காரணமாக நியமனங்களும்அதிகம் வாய்ப்பாக அமையும்

ஆரம்பக் கல்விக்கு அரசுகள்செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச்சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை- ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது. ஆட்சியாளர் நோய் நாடி, நோய்முதல் நாட முன் வரவேண்டும். மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்குE என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான். முதல் அமைச்சர் கவனிப்பாரா

ஆட்சியாளர்மறவாமல் மற்ற இலவசங்களை விரிவுபடுத்துவதைவிடபள்ளிகள் மூடப்படாமல்பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வுகாண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா? by கி.வீரமணி