Sunday, 11 January 2015

எஸ்.எஸ்.எல்.ஸி. தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்று பெற அழைப்பு

"எஸ்.எஸ்.எல்.ஸி. மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்கள், உடனடியாக பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,' என, திருச்சி அரசுத்தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் (பொ) மாதவி தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து மாதவி வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 2012 அக்டோபரில், எஸ்.எஸ்.எஸ்.சி. பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், தனித்தேர்வர்களால் நேரில் பெறப்படாமலும், அஞ்சல் மூலம் உரிய தேர்வர்களுக்கு அனுப்பி, பட்டுவாடா ஆகாமலும், திருச்சி அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர்
அலுவலகத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தேர்வு விதிகளின்படி, மதிப்பெண் சான்றிதழ்கள்
விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து, இரண்டாண்டுக்கு பின், அழிக்கப்படலாம் என்றுள்ளது. எனவே, தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் பெற, இது இறுதி வாய்ப்பு. ஒரு வெள்ளைத்தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தை குறிப்பிட்டு, தேர்வெழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வெழுதிய பாடம் மற்றும் தேர்வெழுதிய மையத்தின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு, 40 ரூபாய்க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரி எழுதிய உறை ஒன்றை இணைத்து, மண்டலத் துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி-1 என்ற முகவரிக்கு, வரும், 31ம் தேதிக்குள் அனுப்பி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். 2012ல் அக்டோபருக்கு பின்னர் வந்த பருவங்களில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களும், அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment