அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊழியர் நலன் கருதி
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமே போனஸ் பெற்று வந்த நிலையை மாற்றி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்காக கருணைத்தொகை வழங்கும் திட்டத்தை 1985-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். ஆவார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்தவர் ஜெயலலிதா. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.3 ஆயிரம் உச்சவரம்பு
கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவற்றை ஜெயலலிதா வழங்கியதைப் போலவே, இந்த ஆண்டும் வழங்கிட முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
* 2013-14-ம் ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.
சிறப்பு மிகை ஊதியம்
* ‘ஏ’ மற்றும் ‘பி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணி புரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப்பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணி புரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக் கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
பல்கலை மானியக்குழு
* உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின்கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக் கும் இந்த மிகை, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியர்களுக்கு ரூ.500
* ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படும் போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க அரசுக்கு 326 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பின் மூலம் 18 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம்
தமிழக அரசின் இந்த அறிவிப்பை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் முன்னாள் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி வாழ்த்தி வரவேற்றுள்ளார். இந்த பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சி மிகுந்த பண்டிகையாக மாற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அதோடு, அரசு டான்சி நிறுவன ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.
அரசுக்கு நன்றி
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன், செயலாளர் கு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மனம் மகிழும் வண்ணம் பொங்கல் போனசையும் சிறப்பு போனசையும் வழங்கி முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்றும், இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு தலைமை செயலக ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.நாகராஜன், செயலாளர் எஸ்.கணேசன், என்.ஜி.ஒ. சங்க முன்னாள் தலைவர் கோ.சூரியமூர்த்தி ஆகியோரும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊழியர் நலன் கருதி
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமே போனஸ் பெற்று வந்த நிலையை மாற்றி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்காக கருணைத்தொகை வழங்கும் திட்டத்தை 1985-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். ஆவார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்தவர் ஜெயலலிதா. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.3 ஆயிரம் உச்சவரம்பு
கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவற்றை ஜெயலலிதா வழங்கியதைப் போலவே, இந்த ஆண்டும் வழங்கிட முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
* 2013-14-ம் ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.
சிறப்பு மிகை ஊதியம்
* ‘ஏ’ மற்றும் ‘பி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணி புரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப்பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணி புரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக் கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
பல்கலை மானியக்குழு
* உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின்கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக் கும் இந்த மிகை, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியர்களுக்கு ரூ.500
* ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படும் போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க அரசுக்கு 326 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பின் மூலம் 18 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம்
தமிழக அரசின் இந்த அறிவிப்பை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் முன்னாள் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி வாழ்த்தி வரவேற்றுள்ளார். இந்த பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சி மிகுந்த பண்டிகையாக மாற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
அதோடு, அரசு டான்சி நிறுவன ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.
அரசுக்கு நன்றி
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன், செயலாளர் கு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மனம் மகிழும் வண்ணம் பொங்கல் போனசையும் சிறப்பு போனசையும் வழங்கி முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்றும், இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு தலைமை செயலக ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.நாகராஜன், செயலாளர் எஸ்.கணேசன், என்.ஜி.ஒ. சங்க முன்னாள் தலைவர் கோ.சூரியமூர்த்தி ஆகியோரும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.






0 comments:
Post a Comment