தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர்.மாநில ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வு, 499 மையங்களில் நடைபெற்றது.
இதில் பார்வையற்ற மாணவர்கள், தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக ஒருமணி நேரம் வழங்கப்பட்டது. சென்னையில், 34 மையங்களில் நடைபெற்ற தேர்வை, 15 ஆயிரத்து 49 மாணவர்கள் எழுதினர். நாகை மாவட்டத்தில், 10 இடங்களில் 3ஆயிரத்து 664 பேர் தேர்வெழுதினர். அப்போது 4 தனிக் குழுவினரும், 2 பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 448 பேர், 15 மையங்களில் தேர்வு எழுதினர். பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மையங்களில் 4 ஆயிரத்து 500 பேர் தேர்வு எழுதினர்.
மொத்தமுள்ள ஆயிரத்து 807 காலியிடங்களுக்கு, சுமார் 2 லட்சம் தேர்வாளர்கள் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது.
இதில் பார்வையற்ற மாணவர்கள், தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக ஒருமணி நேரம் வழங்கப்பட்டது. சென்னையில், 34 மையங்களில் நடைபெற்ற தேர்வை, 15 ஆயிரத்து 49 மாணவர்கள் எழுதினர். நாகை மாவட்டத்தில், 10 இடங்களில் 3ஆயிரத்து 664 பேர் தேர்வெழுதினர். அப்போது 4 தனிக் குழுவினரும், 2 பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 448 பேர், 15 மையங்களில் தேர்வு எழுதினர். பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மையங்களில் 4 ஆயிரத்து 500 பேர் தேர்வு எழுதினர்.






0 comments:
Post a Comment