Pages - Menu

Tuesday, 16 December 2014

பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் துவக்க விழா - DINAMANI

தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் துவக்க விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.

துவக்க நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவர் பொன்.செல்வராஜ் தலைமை வகித்தார்.
கோரிக்கைகள்:
2004 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு, பணியேற்ற நாளிலிருந்து பணி வரன் முறை செய்து, பணப்பலன் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட புதிய நிர்வாகிகளாக, இல.நாகராஜன்(தலைவர்), வீ.முருகப் பெருமாள்(செயலர்), பெ.சோமசுந்தரம்(பொருளாளர்), கே.பூங்காவனம்(அமைப்புச் செயலர்), கார்த்திகா(மகளிர் அணி) ஆகியோரும், தலைமையிடத்துச் செயலராக எம்.ராஜா மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment