Pages - Menu

Friday, 5 December 2014

CRC-யில் கலந்து கொள்ளும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை

   குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை; TESTF பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் தகவல்

         தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் அவர்கள் தொடக்கப்பள்ளி இயக்குநர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை பிறப்பிப்பதாக இயக்குநர் கூறியுள்ளார்.
 
              அடுத்தவார இறுதிக்குள் தரம் உயர்த்தப்படும் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தொடக்க, நடுநிலை & பட்டதாரி காலிப்பணியிடம் பதவிஉயர்வு மூலம் இம்மாத இறுதிக்குள் மீண்டும் நிரப்பப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார் என திரு.ரெங்கராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment