Pages - Menu

Sunday, 30 November 2014

மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்

மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கமுதி வட்டார ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதில் கோரிக்கை வலியுறுத்தப்ப ட்டுள்ளது.   

         கமுதி வட்டார ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம், வட்டார தலைவர் டி.ஞான செல்வம் தலை மையி்ல் நடைபெற்றது. செயலர் ஆ.ராமர் வரவேற்று, சங்க பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலர் எஸ்.முத்து முருகன், துணைத்தலைவர் ஆர்.அரிகிருஷ்ணன், வட்டார முன்னாள் பொரு ளாளர் டி.குலசேகர பாண்டியன் உள்பட பலரும் பேசினர்.

தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு கண க்குச்சீட்டுகள் வழங்குதல், ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்களை இணைய தளத்தில் இ.எம்.ஐ.எஸ். விவரங்களை ஏற் ற வலியுறுத்துவதை கைவிட்டு, வட்டார உதவி தொடக்க கல்வி அதிகாரிகளையை இணைய தளத்தில் ஏற்றச்செய்தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேறறப்பட்டன. பொருளாளர் ஐ.சித்ரா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment