காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும்திறக்கப்படுகிறது. இன்றே இரண்டாம் பருவத்துக்கானபாடப்புத்தகங்கள் வழங்கவும்பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 15ம்தேதி முதல் உயர் வகுப்புகளுக்கானகாலாண்டுத் தேர்வு நடந்து 26ம்தேதியுடன் முடிந்தன. 27ம் தேதி முதல்அக்டோபர் 5ம் தேதி வரை
விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே 6ம் தேதி பக்ரீத்பண்டிகை வருவதால் அன்று அரசு விடுமுறைஅறிவிக்கப்பட்டது. அதனால் 6ம் தேதியும்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.கடந்த மாதம் தமிழகத்தில் சிலஇடங்களில் உள்ளாட்சிகளுக்கான இடைத் தேர்தல் நடந்ததைஅடுத்து கடந்த மாதம் 17, 18ம்தேதிகளில் நடக்க இருந்த காலாண்டுத்தேர்வுகள் அக்டோபர் 7, 8ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்துபெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இன்றும்நாளையும் இரண்டு தேர்வுகள் அடுத்தடுத்துநடக்கும். ஆனால், முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்ககோரி தனியார்பள்ளிகள் 7ம் தேதி போராட்டம்நடத்தும் என்றும் அதனால் 7ம்தேதி பள்ளிகள் இயங்காது என்றும் நேற்று முன்தினம்அறிவிப்பு வெளியானது. அதற்கு பலதரப்பில் இருந்துகண்டனக் குரல் வந்ததை அடுத்துபள்ளிகள் இன்று இயங்கும் என்றுதனியார் பள்ளிகள் அறிவித்துவிட்டன. இருப்பினும், சில தனியார் பள்ளிகள்இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து செல்போன் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளன. இது மாணவர்கள் இடையே பெரும் குழப்பத்தைஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பள்ளி திறக்கும் இன்றுஅனைத்து பள்ளிகளிலும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும்அரசு வழங்கும் விலையில்லா பொருட்களையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றுபள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று பள்ளிகள் திறந்ததும், பாடப்புத்தகங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 24 மையங்களுக்குபாடப்புத்தகங்கள் சென்று சேர்ந்துள்ளன. இவைஇன்று அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம்செய்யப்படும். சுமார் 6 கோடியே 50 லட்சம் புத்தகம் தமிழகம்முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனியார்பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்கள் பள்ளிநிர்வாகம் அனுப்பி வைக்கும் தேவைப்பட்டியலின்படிஅந்தந்த பள்ளிகளுக்கு சப்ளை செய்யவும் தமிழ்நாடுபாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
No comments:
Post a Comment