Pages - Menu

Friday, 18 July 2014

பள்ளிகளில் மாணவர்கள் -ஆசிரியர்விகிதாச்சாரத்தை மாற்ற எதிர்பார்ப்பு

மாணவர்களின்எண்ணிக்கை அடிப்படையில், தொடக்க பள்ளிகளில், மாணவர்- ஆசிரியர் விகிதாச்சாரத்தை மாற்றி அமைத்து, கூடுதல்
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையேஎழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், 23 ஆயிரத்துக்கும்மேற்பட்ட தொடக்க பள்ளிகள் உள்ளன.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்ததொடக்க பள்ளிகளில், அனைவருக்கும் இலவச கட்டாய கல்விசட்டத்தின் படி, 30 மாணவர்களுக்கு ஒருஆசிரியர் என்ற விகிதாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது.
கிராமங்களிலிருந்துநகரங்களுக்கு குடி பெயர்தல், ஆங்கிலமோகம் ஆகியவற்றால், பட்டதாரிகளை உருவாக்கிய தொடக்க பள்ளிகளில் பலவற்றில்மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது. ஒருகட்டத்தில், மாணவர்களே வராத நிலையில், பலபள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக 10 மாணவர்களுக்குகுறைவாக உள்ள பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டுவருகிறது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதுநடைமுறையில் இருந்தாலும், 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளிலும்2 ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். 50 மாணவர்கள் உள்ள பள்ளியிலும், இதேபோன்று இரண்டுஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில்ஒருவர் விடுமுறை எடுத்தால், மற்றவர் அனைத்து மாணவர்களுக்கும்வகுப்பு எடுக்க வேண்டியது உள்ளது. இதனால், விடுமுறையின்றி பணியாற்றும் நிலையில், ஆசிரியர்கள் உள்ளனர். எனவே, அதிக எண்ணிக்கையில்மாணவர்களை சேர்த்து, இயங்கி வரும் தொடக்கபள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் என்ற அடிப்படையில் இல்லாமல், பள்ளியின் செயல்பாடு, மாணவர்களின் வருகையை கணக்கில் கொண்டுகூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையேஎழுந்துள்ளது.தொடக்க பள்ளி ஆசிரியர்ஒருவர் கூறும்போது: ஒரு சில தலைமைஆசிரியர்கள், மாணவர்களை அதிக அளவில் சேர்த்துவருகிறோம். 60 மாணவர்களுக்கு மேல் இருந்தால் தான், 3 ஆசிரியர் நியமிக்கப்படுகின்றனர். அதுவரை இரண்டு ஆசிரியர்கள்மட்டுமே பணிபுரிகின்றனர்.

இதனால், ஒருவர் எதிர்பாராத விதமாக விடுப்பு எடுத்தாலும், மற்றவர் அனைத்து மாணவர்களையும் கவனிக்கவேண்டியது உள்ளது. எனவே, இந்தவிகிதாச்சாரத்தை மாற்ற வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment