Pages - Menu

Friday, 11 July 2014

2 ஆண்டுகளில் 6,82,000 பேருக்கு பணி வாய்ப்புகள்: அமைச்சர்

கடந்த 2 ஆண்டுகளில், 6,82,000 பேருக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம், பணி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகள் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் மோகன் கூறியதாவது: வேலைவாய்ப்பு அலுவலகங்களில்,84.78 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் பணி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment